அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது தமிழ்நாடு மற்றும் கர்நாடக அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அப்பகுதி மக்கள் மனு அளித்த னர். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தர வின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவம் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய புலனாய்வு துறை இயக்குனர் சி.வி. நரசிம்மன் ஆகி யோர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், 189 பாதிக் கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய் தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், 89 பேருக்கு கடந்த 2007 இல் இழப்பீடு வழங்கப்பட்டது. இரு மாநில அரசுகளால் ஒதுக்கப்பட்ட ரூ.10 கோடி யில், சுமார் ரூ.3 கோடி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள் ளது. மீதமுள்ள தொகையை உடனடியாக வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், போதுமான ஆதாரங்கள் இல்லாதது, ஊரை விட்டு வெளியேறியது, என் கவுன்டரில் கொல்லப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் தெரி யாதது போன்ற காரணங்களால் பலர் இன்னும் இழப்பீடு பெறவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவார ணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.