ஆபத்தான முறையில் இருந்த மரங்கள் அகற்றம்
நாமக்கல், மே 9- பள்ளிபாளையம் பகுதியில் ஆபத்தான முறையில் வளர்ந்திருந்த மரங்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றி னர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக் குட்பட்ட மாதாபுரம் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு இலவம்பஞ்சு மரங்கள் மிக உயரமாக வளர்ந்து அவ் வப்போது சாய்ந்து வந்ததால், மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர். உடனடியாக இந்த மரங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், பள்ளிபாளை யம் நகராட்சி மூலம் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினரிடம் முறை யான அனுமதி பெற்று வெள்ளியன்று பள்ளிபாளையம் நக ராட்சி ஊழியர்கள் மரங்களை அகற்றினர். இப்பணிகளை நகர் மன்றத் தலைவர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் ப.பால முருகன், ஆணையர் வி.தயாளன், பொறியாளர் ரேணுகா, நகர்மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மத வெறியை தூண்டிய மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
கோவை, மே 9– மத வெறியை தூண்டும் மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கோவையில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற மதுரை ஆதீனத்தின் கார் உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் சிக்கியது. அப்போது தன்னை கொலை செய்ய கார் விபத்து மூலம் சதி நடந்ததாக மதுரை ஆதீனம் மற்றும் கார் ஓட்டுநர் குற்றம் சாட்டினர். விபத்து ஏற்படுத்திய காரில் இருந்தவர்கள் குல்லா அணிந்தி ருந்தார்கள், தாடி வைத்திருந்தார்கள் எனவும் கூறினர். தமி ழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், சிசிடிவி காட்சிகள் அவர்களின் குற்றச்சாட்டு பொய்யென அம்பலம் ஆனது. மேலும், மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநரின் தவறினாலே விபத்து நடந்தது என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது வழக்கும் பதிவு செய் யப்பட்டுள்ளது. இதற்கிடையே ஒரு சிறு விபத்தை பயண்படுத்தி, மத வெறியை தூண்டும் வகையில் மதுரை ஆதீனம் நடந்து கொண்டது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. எனவே, ஆதீனத்தின் மீதும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெள்ளியன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அனைத்து முற் போக்கு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.
அணை நிலவரம்
பவானிசாகர் அணை நீர்மட்டம்:68.54/105அடி நீர்வரத்து:104கனஅடி நீர்த்திறப்பு:155கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:34.70/72அடி நீர்வரத்து:31கனஅடி நீர்திறப்பு:1160கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:1.98/160அடி நீர்வரத்து:9.96கனஅடி நீர்திறப்பு:9.96கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:72.55/120அடி நீர்வரத்து:181கனஅடி நீர்திறப்பு:61கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:34.41/60அடி நீர்வரத்து:852கனஅடி நீர்திறப்பு:641கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்: 47.67/90அடி நீர்வரத்து:18கனஅடி நீர்திறப்பு:18கனஅடி
சயனைடு குடித்து தம்பதி தற்கொலை
கோவை, மே 9 – தனது மகள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சிய டைந்த நிலையில், அவரை பாராட்டிவிட்டு, தொழில் நட்டம் காரணமாக சயனைடு குடித்து தங்கநகை தொழிலாளி தம்பதியினர் தற் கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகு தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, செல்வபுரம் இந்திரா நகர் அமுல் நகர் 2 ஆவது வீதியை சேர்ந்தவர் திரு முருகன் (47). இவரது மனைவி பிரதிபா ரமணி (38). இவர்களது மகள் ஜனனி (17). திருமுருகன் தங்க கட்டிகளை வாங்கி ஆபரணமாக செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி அவ ருக்கு உதவியாக இருந்து வந்தார். மகள் ஜனனி பிளஸ் - 2 முடித்து (வியாழனன்று) வெளியான தேர்வு முடிவுகளில் நல்ல மதிப் பெண் பெற்று இருந்தார். கடந்த சில வருடங்க ளாக திருமுருகனுக்கு தொழிலில் நட்டம் ஏற்பட்டு வந்தது. அதற்காக சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. அதனை திருப்பி செலுத்த முடியாததால் கணவன் - மனைவி மன வேதனையுடன் இருந்து வந்த னர். இந்த நிலையில் தொழில் நஷ்டத்தால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து மதியம் பிளஸ் - 2 தேர்வு முடிவுகளை பார்த்து மகள் ஜனனியை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பச்சாப்பாளையத்தில் உள்ள பிரதிபா ரமணி யின் தங்கை ஜெயப்பிரியா வீட்டிற்கு ஜன னியை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கணவன் - மனைவி இருவரும் சயனைடு குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சித்தி வீட்டில் இருந்த ஜனனி இரவு பெற் றோரிடம் பேசுவதற்காக போனில் அழைத் துள்ளார். வெகு நேரமாகியும் அவர்கள் போனை எடுக்காததால் ஜனனி தனது சித்தி ஜெயப்பிரியாவிடம் தெரிவித்துள் ளார். அவரும் போன் செய்து எடுக்காததால் சந்தேகமடைந்த ஜெயப்பிரியா தனது கண வரை அழைத்து கொண்டு திருமுருகன் வீட் டிற்கு சென்றார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவர்களது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டி பார்த்த போது அவர்கள் திறக்காததால் ஜன்னல் வழி யாக எட்டி பார்த்தனர். அப்போது இருவ ரும் அறையில் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஜெயப்பிரியா மற்றும் அவரது கணவர் அக்கம், பக்கத்தி னர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அதில் அவர்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம் பவ இடத்துக்கு வந்து தம்பதியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் அவர்களது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது திருமுருகன், பிரதிபா ரமணி கடவுளுக்கு நன்றி தெரிவித்து எழுதி வைத்து இருந்த கடிதம் சிக்கியது. இதைய டுத்து போலீசார் கடிதத்தை கைப்பற்றி, விசா ரணை நடத்தி வருகின்றனர்.