ஏப்.28இல் திருப்பூரில் ரேசன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ரேசன் கடைகளைத் தனித்துறையாக அறிவிக்க கோரி ஏப்ரல் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத் துவதென திருப்பூர் மாவட்ட கூட்டுறவுப் பணியாளர் சங் கம் (சிஐடியு)முடிவு செய் துள்ளது. திருப்பூர் மாவட்ட கூட்டு றவு பணியாளர் சங்க நிர்வாகக்குழு கூட்டம் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் ஞாயி றன்று மாவட்டத் தலைவர் பி.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி ரேசன் கடைகளை தனித்துறை யாக அறிவிக்க வேண்டும், நியாய விலை கடைகளுக்கும் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும், பி.ஓ.எஸ். இயந்திரத்தில் ஏற்படும் சர் வர் கோளாறுகளை உடனடியாக சரி செய்து தாமதம் இல்லாமல் பொருட்கள் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். வயது முதிர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்குஅனைத்து பகு திகளிலும் முகாம் அமைத்து கைரேகை பதிவு புதுப்பித்து தர மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் மளிகை பொருட்கள் விற்பனையாளர் தேவை பட்டி யல் பெற்று மட்டுமே அனுப்ப வேண்டும், காலாவதியான பொருட்களை உடனடியாக அந்த விற்பனைச் சங்கங்கள் திரும்ப எடுக்க வேண்டும். அனைத்து நியாய விலை கடைக ளுக்கும் அளவையாளர் நியமிக்க வேண்டும். சம்பள ரசீது மற்றும் காப்பீடு அட்டை வழங்கப் படாதவர்களுக்கு உடனடியாக காப்பீடு அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை நிறைவேற்றக் கோரி ஏப்.28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள் ளது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே.மகேந்திரன், மாவட்டப் பொருளாளர் பி.சுரேஷ் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.