ரம்ஜான் – களைகட்டிய அன்னூர் ஆட்டுச்சந்தை
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அன்னூரில் உள்ள பிரபலமான ஆட்டுச்சந்தை சனிக்கிழமை அதிகாலை முதலே களைகட்டத் தொடங் கியது. விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த நிலையில், வியாபாரிகள் போட்டி போட் டுக்கொண்டு ஆடுகளை வாங் கிச் சென்றனர். கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் முக்கியத் தொழிலாக இருந்தாலும், ஆடு வளர்ப்பு பலருக்கு கூடுதல் வருமானமாக உள்ளது. இப்பகுதியில் புல்வெளிகள் நிறைந்த மேய்ச்சல் நிலங்கள் அதிகம் இருப்பதால், ஆடுகள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு சனிக் கிழமையும் நடைபெறும் அன்னூர் சந்தை, விவசாயிகளுக்கு தங்கள் ஆடுகளை விற் பனை செய்யும் முக்கிய தளமாக விளங்கு கிறது. ரம்ஜான் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படுவதால், சனிக்கிழமை அதி காலை 5 மணி முதலே சந்தையில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளுடன், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ஆடுகளை வாங்க வந்திருந்தனர். வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலையாடு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. குட்டி கள் 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையி லும், திடகாத்திரமான, எடை அதிகமுள்ள ஆடுகள் 8,000 ரூபாய் முதல் அதிக பட்சமாக 20,000 ரூபாய் வரையிலும் விற் பனையானது. ரம்ஜான் பண்டிகையை முன் னிட்டு ஆடுகளுக்கான தேவை அதிகரித்துள் ளதால், வியாபாரிகள் அதிக அளவில் ஆடு களை வாங்கிச் சென்றனர்.