15 ஆவது ஊதிய பேச்சுவார்த்தையை விரைந்து முடித்திடுக
சேலம், மே 14- 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும், என சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சிஐடியு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்ட 36 ஆவது ஆண்டு பேரவை, வி.பி.சிந்தன் நினைவரங் கத்தில் புதனன்று நடைபெற்றது. முன்னதாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மெய்யனூர் போக்குவரத்து பணிமனை முதல் சிஐடியு மாவட்டக்குழு அலுவல கம் வரை போக்குவரத்து தொழிலா ளர்கள் பேரணி நடைபெற்றது. இதையடுத்து, சங்கத்தின் மண்ட லத் தலைவர் கே.செம்பன் தலை மையில் நடைபெற்ற பேரவை யில், எம்.பழனிசாமி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். சம் மேளனக்குழு உறுப்பினர் பி.முரு கன் வரவேற்றார். துணைத்தலை வர் என்.இளவழகன் அஞ்சலி தீர் மானத்தை வாசித்தார். பொதுச் செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் எம்.சேகர் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். சாலைப் போக்குவரத்து ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், தருமபுரி பொதுச்செயலாளர் எஸ்.சண்மு கம், சிஐடியு மாவட்டப் பொருளா ளர் வி.இளங்கோ ஆகியோர் வாழ்த் திப் பேசினர். சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், போக்குவ ரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் முழுமை யாக ஒதுக்க வேண்டும். 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும். 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் வார ஓய்வு வழங்க வேண்டும். மகளிர் இலவச பயணத்திற்கான பேட்டா, டெக் னிக்கல் இன்சென்டிவ் உயர்த்தி வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மண்டலத் தலைவராக கே.செம் பன், பொதுச்செயலாளராக ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக எம்.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், உதவிச்செயலாளர் ஜி.பழனிவேல் நன்றி கூறினார்.