tamilnadu

img

கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை விரைந்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை விரைந்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதி யிலிருந்து இரவு நேரத்தில் வெளியேறி கால் நடைகளை வேட்டையாடும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதி யில் வசிக்கும் பொதுமக்கள் கால்நடை வளர்ப்புத் தொழிலை பிரதானமாக செய்து வருகின்றனா். ஆண்டுதோறும் வறட்சிக் காலங்களில் கர்நாடகம், ஆந்திர மாநிலங் களில் இருந்து யானைகள் கூட்டமாக உணவு, தண்ணீர் தேடி ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதிக்குள் நுழைகின்றன. இந்த வனப்பகுதிகளில் மான், செந்நாய், காட் டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள் ளன. தற்போது இந்த வனப்பகுதியில் சிறுத் தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அண்மைக் காலமாக வனத்தைவிட்டு வெளி யேறும் சிறுத்தைகள், வனப்பகுதிகளை ஒட்டி யுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள கால்நடைகளை வேட்டையாடி செல்கின்றன. அண்மையில் பென்னாகரம் அருகே சின்ன  வத்தலாபுரம் பகுதியில் நுழைந்த சிறுத்தை யைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் அமைத்தனர். அதுபோல ஒகேனக்கல் வனப் பகுதிக்குட்பட்ட போடூரில் நுழைந்த சிறுத்தை, 10க்கும் மேற்பட்ட ஆடுகளைக் கடித்துச் சென்றது. இரவு நேரத்தில் கால்நடைகளைத் தேடி வரும் சிறுத்தை மக்களையும் தாக்க வாய்ப்புள்ளது. எனவே, பென்னாகரம், ஒகேனக்கல் வனத்துறையினர் குழுக்கள் அமைத்து சிறுத்தையைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விடவேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

நூறுநாள் வேலைத்திட்டத்தில் சம்பளப் பாக்கியை வழங்க வேண்டும். பேரூராட்சிக்கு இத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளியன்று, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் எம்.செல்வம் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.முத்து, தலைவர் கெ.கோவிந்தசாமி, பொருளாளர் எம்.சிவா, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.பாண்டியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.