விபத்தில்லா பயணத்தை உறுதி செய்ய வலியுறுத்தி மறியல்
நாமக்கல், ஜூன் 17- பள்ளிபாளையத்தில் புதிதாக திறப்பப்பட்ட மேம்பாலத்தால், 15 நாட்களில் 5க்கும் மேற்பட்ட விபத்து கள் ஏற்பட்டுள்ள நிலையில், விபத் தில்லா பயணத்தை உறுதி செய்ய வேண்டும், என வலியுறுத்தி அப் பகுதி பொதுமக்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தில் போக்குவரத்து நெரி சலை குறைக்கும் வகையில், ஈரோடு - திருச்செங்கோட்டை இணைக்கும் வகையில் ரூ.424 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேலாகவே அதன் பணிகள் நடைபெற்று வந்த நிலை யில், பாலத்தின் வெளிப்புற பகுதி கள் பெயிண்ட் அடிக்கப்படாமலும், பேட்ச் ஒர்க் செய்யப்படாமலும் திறக்கப்பட்டது சர்ச்சையை ஏற்ப டுத்தியது. இருந்தபோதிலும் பாலம் திறக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், ஈரோட் டிலிருந்து திருச்செங்கோடு சாலை ஆலாம்பாளையம் என்ற பகுதிக்கு இரண்டு இளைஞர்கள், சொகுசு காரில் வந்து கொண்டிருந்தனர். புதிய மேம்பாலத்தின் கீழே இறங் கும்போது, இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் சாலையை கடக்க முயன் றுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத காரில் வந்த இளைஞர் வாகனத்தை திருப்பியதால், நிலை தடுமாறி சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி சாலையோரத்திலி ருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இளை ஞர்கள் இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். இதையடுத்து சம்பவ இடத்தில் திரண்ட அப்பகுதி பொதுமக்கள் மற் றும் வாகன ஓட்டிகள், புதிதாக கட் டப்பட்ட மேம்பாலத்தின் மூலமாக போக்குவரத்து பாதிப்பு குறைவ தற்கு மாறாக, விபத்துகள் அதிகரிக் கிறது. இப்பகுதியில் வேகத்தடை மற்றும் இருப்பு தடுப்புகள் அமைக்க வேண்டும், என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிபாளையம் போலீசார், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் வேகத் தடை அமைக்கப்படும் என உறுதிய ளித்தனர். அதன்பேரில் அனைவ ரும் அங்கிருந்து கலைந்து சென்ற னர். இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், புதிதாக கட் டப்பட்ட மேம்பாலத்தால் போக்குவ ரத்து பாதிப்பு குறைந்து, இலகு வான போக்குவரத்து பயணம் இருக் கும் என எதிர்பார்த்தோம். ஆனால், பாலம் திறக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரையிலும் கடந்த 15 நாட்க ளில் 5க்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்றுவிட்டன. மேம்பாலத்தி லிருந்து கீழே வாகனங்கள் வேக மாக வந்து கொண்டிருக்கும் பொழுது, கீழ் பகுதியில் உள்ள இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்துடன் திடீரென உள்ளே நுழைகின்றனர். இங்கு போதிய அளவு டிவைடர் கள் மற்றும் வேகத்தடை இல்லாத தால் இத்தகைய விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரு கின்றன. எனவே, உடனடியாக வேகத்தடை மற்றும் டிவைடர்கள் அமைக்க வேண்டும். விபத்தில்லா பயணம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை காவல் துறையி னரும், நெடுஞ்சாலை துறையின ரும் மேற்கொள்ள வேண்டும், என்ற னர்.