tamilnadu

img

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கேக் வெட்டி கொண்டாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கேக் வெட்டி கொண்டாட்டம்

சேலம், மே 14- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வழங் கப்பட்ட தீர்ப்பை வரவேற்று, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில் தொடர்பு டைய 9 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண் டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்று, சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கேக் வெட்டியும், பட்டாசு  வெடித்தும் கொண்டாடினர். சாமிநாதபுரத் தில் சிபிஎம் வடக்கு மாநகரச் செயலாளர் என். பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வாலிபர் சங்க மாநகரப் பொருளா ளர் டி.மனோகரன், துணைத்தலைவர் கே. நாகராஜ், மாதர் சங்க மாநகரச் செயலாளர் ஆர்.ரம்யா ஆகியோர் பங்கேற்றனர். சேலம்  மேற்கு சிபிஎம் மாநகரக்குழு சார்பில், பட்டாசு  வெடித்தும் கேக் வெட்டியும் கொண்டாட்டப் பட்டது. இதில் கட்சியின் மேற்கு மாநகரச் செய லாளர் பி.கணேசன், மாநகரக்குழு உறுப் பினர் பி.பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து  கொண்டனர். சேலம் கிழக்கு மாநகரக்குழு சார்பில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், இடைக்கமிட்டி செயலாளர் கே.பச்சமுத்து, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வைர மணி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி. பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்ட னர்.