பொள்ளாச்சியில் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சியில் நேற்று காலை பள்ளி மாணவி ஒருவரை காணவில்லை என்று அவரது தந்தை பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சந்தேகத்தின் பெயரில் குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த அமானுல்லா என்ற இளைஞரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை தனியாக அழைத்துச்சென்று அவரது நண்பர்கள் 9 பேருடன் இணைந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. அந்த சிறுமியை மிரட்டி ஏற்கனவே அமானுல்லாவும் அவரது நண்பர்களும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டனர். இதற்கிடையில் சிறுமியை ஆழியாறு சாலையில் விட்டு விட்டு இளைஞர்கள் தப்பினர். சிறுமியை மீட்ட காவல்துறையினர். அமானுல்லா, பகவதி, முகமது அலி, டேவிட் செந்தில், முகமது ரபீக், அருண்நேரு, சையத் முகமது, இர்ஷாத் முகமது, இர்ஷாத் பாஷா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.