போராட்டத்திற்கு செல்ல விடாமல் தடுத்த காவல்துறை
மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம், ஏப்.23- சென்னையில் நடைபெற்ற போராட்டத்திற்கு செல்ல விடா மல், சங்க நிர்வாகிகளை வீட்டுக் காவலில் வைத்த காவல் துறை யைக் கண்டித்து, மாற்றுத்திறனா ளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். வாழ்வாதாரக் கோரிக்கை களை வலியுறுத்தி, மாற்றுத்திறனா ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் செவ்வாயன்று நடை பெற்றது. இப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சேலம் மாவட்டம், மேட்டூரிலிருந்து சங்கத் தின் நிர்வாகிகள் சென்னை செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை தடுத்து, காவல் துறையினர் வீட்டுக் காவலில் வைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண் டித்து, மேட்டூர் அணை பேருந்து நிலையத்தில் செவ்வாயன்று மாலை மாற்றுத்திறனாளிகள் சங் கத்தின் தலைவர் அம்மாசி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சங்கத்தின் நிர்வாகிகள் ஜான் பெர்னாண்டஸ், பவுல்ராஜ், நட ராஜ், சுகுமார், நாகேந்திரன், மாதை யன் ஆகியோர் கண்டனவுரை யாற்றினர். இதில், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, சேலம் ஜில்லா கட்டிட தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.கருப்பண்ணன், சிஐடியு மாவட் டப் பொருளாளர் வி.இளங்கோ உட் பட பலர் கலந்து கொண்டனர்.