tamilnadu

img

இரும்பு தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

இரும்பு தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

சேலம், செப்.16- காகாபாளையம் அருகே இரும்புத் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் காவல்  நிலையத்தை முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம், கூட லூர் ஊராட்சிக்குட்பட்ட கிழக்குபாளையம் பகுதியில் இரும்பு தொழிற்சாலை அமைக்க கடந்த ஓராண்டுக்கு முன்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதை யடுத்து, கடந்த செப்.13 ஆம் தேதி வேறு இடத்தில்  இயங்கிக் கொண்டிருந்த இரும்புத் தொழிற்சாலையை இங்கு கொண்டு வந்ததை அறிந்த அப்பகுதி மக்கள்  500க்கும் மேற்பட்டோர் திங்களன்று மகுடஞ்சாவடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முறையிட்டனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இரும்புத் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்புத் தெரி வித்து மாவட்ட ஆட்சியா், வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை. தற்போது காவல் நிலையத் தில் முறையிட்டுள்ளோம். இதுகுறித்து அரசு அதிகாரிக ளிடம் தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர், என்ற னர்.