பழங்குடியின குடும்பத்தினருக்கு வீடு கட்ட ஆணை
நீதிபதி முரளிதரன் தகவல்
உதகை, ஜூன் 12- நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கூடலூர் பகுதி யில் 25 பழங்குடியின குடும்பத்தினருக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டு உள் ளது என்று நீதிபதி முரளிதரன் தெரி வித்தார். நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட சட் டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற் றும் முதன்மை மாவட்ட நீதிபதி முரளித ரன் கூறியதாவது, எந்த ஒரு வழக்கி லும் தனிப்பட்ட முறையில் வழக்கறி ஞர்கள் வைத்து வழக்கு நடத்த முடி யாதவர்களுக்காக, இலவசமாக வழக்க றிஞர்களை நியமித்து வழக்கை நடத்து வதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவுகிறது. பெண்கள், குழந்தைகள், கொத்தடிமை தொழிலா ளர்கள், இளம் குற்றவாளிகள், தாழ்த்தப் பட்ட சமுதாயப் பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.3 லட் சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இந்த சேவையை பெறலாம். சட்டம் சார்ந்த பிரச்சினையாக இருந்தால் ஆணைக் குழு மூலம் வழக்கறிஞர்கள் நியமிக்கப் பட்டு வழக்கு நடத்தப்படும். இதில், வழக் கறிஞர்களுக்கு கட்டணம் ஆணைக்குழு சார்பில் செலுத்தப்படும். சட்டம் சாராத பிரச்சனையாக இருந் தால் பாதிக்கப்பட்ட அல்லது நிவாரணம் கேட்கும் நபர் கொடுக்கும் மனு சம்பந்தப் பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு நடவ டிக்கை எடுக்கப்படும். கடந்த 2024 நவம்பர் முதல் மே 2025 வரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் பள்ளி கல்லூரிகள், குழந்தைகளுக்காக 41 விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மேலும், குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண் களுக்கு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் பெண்கள் மத்தி யில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மிஷன் பாவை திட்டத்தின் கீழ் 22 சட்ட விழிப்புணர்வு முகாம்களும், இல்லம் தேடி இந்திய அரசியலமைப்பு என்ற கருப்பொருளில் கடந்த ஆண்டு நவம் பர் 26 முதல் ஜனவரி 26 வரை 51 முகாம்க ளும் நடத்தப்பட்டது. நீலகிரியில் பழங்குடியின மக்களுக் காக 47 சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. கூடலூர் பகுதி யில் உள்ள பள்ளியில் இடை நின்ற மாண வர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ளனர். பந்தலூர் பகுதியில் 25 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாத கிராமத்திற்கு மின்சார வசதி ஏற்படுத் தப்பட்டது. பழங்குடியின மாணவர்கள் உதவி பெறும் வகையில் அவர்களது பெற்றோர்களுக்கு வருமான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. செம்பகொல்லி பழங்குடியின கிராமத்திற்கு சாலை வசதி, கிண்ணக்கொரை பகுதியில் பழங்குடியினர் அல்லாத 10 குடும்பங் களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கூடலூர், பந்தலூர், கரிக் கையூர் பகுதிகளில் வசிக்கும் 25 வீடற்ற பழங்குடியின மக்களுக்கு, வீடு கட்டு வதற்கான ஆணைகள் பெற்று வழங்கப் பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சட்ட உதவி, சட் டம் சாராத கோரிக்கைகளுக்கு உதகை யில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அல்லது வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை நேரில் அணுகலாம். மேலும் 15100 கட்டண மில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார். இதில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பால முருகன் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.