சோலார் பேனல் அமைத்ததற்கு எதிர்ப்பு
கோபி, ஜூன் 13- நம்பியூர் அருகே தனியார் நிறுவ னம் சோலார் பேனல் அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவ லகத்தை பொதுமக்கள் மற்றும் விவசா யிகள் முற்றுகையிட்டனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் பேரூ ராட்சிக்குட்பட்ட இச்சிப்பாளையம், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதி களில் தனியார் நிறுவனம் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சோலார் பேனல் அமைத் துள்ளது. தனியார் நிறுவனம் சோலார் பேனல் அமைக்க பேரூராட்சி அலுவல கத்தில் முறையாக எந்தவித அனுமதி யும் பெறாமால் பேரூராட்சித் தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டு தடை யின்மை சான்று வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனடிப்படையில் தனியார் நிறுவ னம் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சோலார் பேனலை அமைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி கள் தெரிவிக்கையில், தனியார் நிறுவ னம் சோலார் பேனலுக்கு தண்ணீர் தேவைக்காக சுமார் 50 ஆழ்குழாய் கிண றுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக் கப்பட்டு வருவதால் அப்பகுதியில் உள்ள சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக் கப்படும். எனவே முறையாக அனுமதி பெறாமல் அமைக்கப்பட்ட சோலார் பேனல்களை அகற்றி விவசாயிகளை யும் பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும் எனக்கூறி வெள்ளியன்று நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.