tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் எஸ்.எஃப்.ஐ போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 50 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மோடி அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் பொதுமக்கள் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தில்லியில் ஜாமியா பல்கலை மாணவர்கள் ஈடுபட்ட போராட்டத்தில் காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்திரபிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில் இன்று கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்து மாணவர்கள் முழக்கமிட்டனர். இதைத்தொடர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்ட மாணவர்களை மறித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. 
இதையடுத்து 6 பெண்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.