ஊட்டி, கூடலூர் மாதர் சங்க மாநாடுகள்
உதகை, ஜூன் 14- நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் கூடலூர் தாலுகா மாதர் சங்க மாநாடு கள் நடைபெற்றது. இதில், புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நீலகிரி மாவட்டம், கூடலூர் ஏரியா 11 ஆவது மாநாடு சனியன்று கூட லூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்தில் நடைபெற்றது. இம்மாநாட் டிற்கு, கௌசல்யா தலைமை வகித் தார். மாதர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் லீலா வாசு துவக்கவுரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் பானுமதி வாழ்த்தி பேசினார். இதில், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் முறை யாக குடிநீர் வழங்க வேண்டும். உயர்த் தப்பட்ட வீட்டு வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் இருக்கை அமைக்க வேண்டும். ரேசன் கடைகளில் ஏற்படும் காலதாமதத்தை கலைந்து, விரைந்து பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. மாநாட்டில் புதிதாக கூடலூர் தாலுகா தலைவராக கௌசல்யா, செய லாளராக சோபா, பொருளாளராக பிந்து உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். முடிவில், அமிர்தகுமாரி நன்றி கூறினார். இதேபோன்று, ஊட்டியில் மாதர் சங்கத்தின் உதகை 11 ஆவது தாலுகா மாநாடு வெள்ளியன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு, தலைவர் பானுமதி தலைமை வகித்தார். சிபிஎம் உதகை தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் துவக்கிவைத்தார். தாலுகா குழு உறுப் பினர் ராஜரத்தினம் வாழ்த்தி பேசினார். இதில், விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும். பெண்கள், குழந்தை கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில், ஊட்டி தாலுகா தலைவராக தமிழ்மணி, செயலாளராக பிரமிளா, பொருளாளராக சுந்தரி உள் ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட் டனர். சிஐடியு மாவட்டச்செயலாளர் சி. வினோத் நிறைவுரையாற்றினார். முடி வில் புவனா நன்றி கூறினார்.