கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமார் கிரியப்பனவர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த கிராந்திகுமார் பாடி, தற்போது தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், தலைமைச் செயலாளரின் அலுவலகத்தில் அரசு இணை செயலாளர், பொதுத்துறை மற்றும் தனி அலுவலராக இருந்த பவன்குமார் கிரியப்பனவர், கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.