விபத்தில் காயமடைந்த நிலையிலும் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவி நாமக்கல்,
மார்ச் 3- நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி கார்த்திகா, பிளஸ் டூ தமிழ் பாடத் தேர்வு எழுதுவதற்காக சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி னார். தலையில் பலத்த காயமடைந்த நிலையிலும், காலை 9:45 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுதி னார். பொம்மை குட்டை மேட்டில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் கார்த்திகா வின் தேர்வு மையம் செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருந்தது. திங்கள்கிழமை காலை தமிழ் பாடத் தேர்வுக்காக சைக்கிளில் சென்றபோது எதிர்பாராத வித மாக விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயமடைந்த நிலையில், அருகிலிருந்தவர்கள் அவரை தனியார் மருத்து வமனையில் அனுமதித்தனர். அங்கு தலையில் கட்டு போட்டுக் கொண்டு, காலை 9:45 மணிக்கு தேர்வு மையத் திற்கு வந்தார். தலையில் காயத்துடன் மாணவி கார்த்திகா வந்ததைக் கண்ட கல்வித் துறை அதிகாரிகள், அவரை அழைத் துச் சென்று அறையில் அமர வைத்தனர். செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்வதற்காக வந்த மாவட்ட ஆட்சியர் உமா, விபத்தில் சிக்கி தலையில் கட்டு போட்டவாறு தேர்வு எழுதிய மாணவியை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தன்னம்பிக்கையுடன் தைரிய மாக தேர்வு எழுதுமாறு ஊக்கப்படுத்தினார்.