ஈரோடு மாவட்டம் நாகமலை உயிரியல் பாரம்பரியத் தலமானது
சென்னை, அக். 8- தமிழ்நாடு அரசு உயிரியல் பன்மைச் சட்டத்தின் கீழ் அரிட்டா பட்டியை நவம்பர் 2022-இல் பல்லு யிர் பாரம்பரியத் தலமாக அறிவித்தது. காசம்பட்டி மார்ச் 2025-இல் அறி விக்கப்பட்டது. எலத்தூர் ஏரி செப்டம் பர் 2025-இல் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 32.22.50 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட ஈரோடு மாவட்டத்திலுள்ள நாகமலை குன்றை, மாநிலத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பல்லுயிர் பாரம்பரியத் தலங்கள் என்பவை தனித்துவமான மற்றும் நலிந்த சுற்றுச்சூழல் அமைப்பு களை ஆதரிக்கும் சூழலியல் முக்கிய த்துவம் வாய்ந்த பகுதிகளாகும். இவை அரிய, அச்சுறுத்தலுக்கு உள் ளான மற்றும் முக்கிய நலிந்த இனங்களைப் பாதுகாக்கின்றன. ஒரு பகுதிக்கு பல்லுயிர் பாரம்பரிய தல அங்கீகாரம் கிடைப்பது உள்ளூர் சமூகங்களுக்கு பெருமையை அளிக்கிறது, பாதுகாப்புக் கொள்கை களை பலப்படுத்துகிறது. நாகமலை குன்று ஒரு சூழலியல் வளமிக்க இடமாகவும், இடம்பெயர்ந்து வரும் மற்றும் உள்ளூர் பறவைகள், நீர்வாழ் உயிரி னங்கள் மற்றும் பல்வேறு ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஒரு முக்கிய வாழ்விடமாகவும் உள்ளது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த பற வைகள் கணக்கெடுப்பு- 2024 அடிப்ப டையில், இங்கே 138 தாவர இனங்கள், 118 பறவை இனங்கள் (30 இடம் பெயர்பவை - 88 உள்ளூர் வகையைச் சேர்ந்தவை), 7 பாலூட்டிகள், 11 ஊர்வன, 5 சிலந்திகள் மற்றும் 71 பூச்சியினங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இங்குள்ள முக்கிய உயிரினங் களில் பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு, வெளிறிய பூனைப் பருந்து மற்றும் பென்னெல்லிஸ் கழுகு ஆகியவை அடங்கும். நாகமலை குன்று அதன் சூழலியல் மதிப்புடன் மட்டுமல்லாமல் குறிப்பிடத்தக்க தொல்லியல் மற்றும் கலாச்சார முக்கி யத்துவத்தையும் கொண்டுள்ளது. இரும்புக் காலத்தைச் சேர்ந்த கற்குவை வட்டங்கள், பாறை மறை விடங்கள் மற்றும் பழங்கால முக்கி யத்துவம் வாய்ந்த கலைப்பொருட் கள் ஆகியவற்றின் சான்றுகள் அதன் வரலாற்று ஆழத்தை எடுத்துக்காட்டு கின்றன. தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் சுவாமி கல்வெட்டு ஒன்று அதன் கலாச்சாரப் பாரம்பரியத்தை வலியுறுத்துகிறது.
