வெள்ளத்தில் சிக்கிய தாய், மகள்: துரிதமாக செயல்பட்ட இளைஞர்கள்
கோவை, அக்.4- வால்பாறையில் காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிய தாய் மற்றும் மகளை, இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர். கோவை மாவட்டம், வால் பாறை பகுதியில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில், வெள்ளியன்று அக்கா மலை கிராஸ் ஹிட்ஸ் பகுதியில் கன மழை பெய்ததால் கருமலைப் பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அப்பகுதி யில் உள்ள சீதாலட்சுமி என்பவர் தன் னுடைய மகள் பிந்துவை துணி துவைப்பதற்காக ஆற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப் போது எதிர்பாராத விதமாக காற் றாற்று வெள்ளம் அவர்களை சூழ்ந்து கொண்டது. இதில் தாய், மகள் இருவரும் தத்தளித்து கூச்ச லிட்டனர். அப்போது அங்கு உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா கோவிலின் மாதாந்திர ஆராத னைக்காக வந்திருந்த பக்தர்கள் தண்ணீரில் தத்தளித்த தாய், மக ளைக் கண்டு கூச்சலிட்டனர். உடன டியாக அப்பகுதியில் உள்ள இளை ஞர்கள் கயிறு கட்டி நீண்ட போராட் டத்திற்கு பின்பு ஆற்றில் இருந்த தாய், மகளை காப்பாற்றியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. உடனடியாக வால்பாறை தீய ணைப்புத் துறைக்கு தெரிவிக்கப் பட்டு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது பொதுமக்கள் அவர் களை மீட்டெடுத்தது தெரிய வந் தது. உடனடியாக அப்பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகளை அழைத்து ஆற்றுப்பகுதிக்குள் இறங்க வேண்டாம் மேல்பகுதியில் திடீரென காற்றாற்று வெள்ளம் வரும் வெள்ளத்தில் அடித்துச் செல்ல வாய்ப்புகள் உள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் ஆற் றில் இறங்க கூடாது என தீயணைப் புத்துறை மேற்பார்வையாளர் வேலு அறிவுரை வழங்கினார். மேலும் ஆற்றில் துணி துவைப்ப தற்கோ, கால்நடைகளை மேய்ச்ச லுக்கு அனுப்பவும் கூடாது என தீய ணைப்புத்துறையினர் எச்சரிக்கை செய்தனர். நல் வாய்ப்பாக இரு வரை மீட்டெடுத்த இளைஞர்க ளுக்கு பொதுமக்கள் நன்றி தெரி வித்தனர்.
