நிலச்சரிவை தடுக்க நவீன “சாயில் நீலிங்” பணி
மேட்டுப்பாளையம், ஏப். 5 – மேட்டுப்பாளையம்-நீலகிரி மலைப்பாதையில் நிலச்சரிவை தடுக்கும் வகையில் 10 இடங்களில் நவீன “சாயில் நீலிங்” முறையில் மண் ஆணி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகே நிலச்சரிவை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நவீன திட்டப்பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சனியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய் வின்போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நீல கிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ. வ. வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளை யத்தில் இருந்து நீலகிரி மாவட் டம் கோத்தகிரி செல்லும் மலைப் பாதை நெடுஞ்சாலை உட்பட நீல கிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்ப டும் அபாயம் உள்ள 10 இடங்களில் “சாயில் நீலிங்” எனப்படும் நவீன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மழைக் காலங்களில் மண் சரிவுகள் ஏற்ப டும் வாய்ப்புள்ள பகுதிகள் கண்டறி யப்பட்டு, அதனை தடுக்கும் நோக் கில் இந்த நவீன “சாயில் நீலிங்” எனப்படும் மண் ஆணி அடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடை பெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மலையின் அடிவார பகுதி யான மேட்டுப்பாளையம் வழியா கவே ஊட்டி, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளுக்கு செல்கின்ற னர். போக்குவரத்து முக்கியத்து வம் வாய்ந்த இந்த மேட்டுப்பாளை யம்-கோத்தகிரி மலைச்சாலையில் மழைக்காலங்களில் அடிக்கடி மண் சரிவுகள் ஏற்பட்டு மரங்கள், மண் மற்றும் பாறாங்கற்கள் சரிந்து விழுந்து சாலையை சேதப்படுத் துவதுடன் போக்குவரத்தும் துண் டிக்கப்படுகிறது. இதனால் இப் பகுதியில் அபாயகரமான சூழல் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு, நிலச்சரிவுகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து மாநில நெடுஞ் சாலைத்துறையினர் வல்லுநர் குழு வினரின் ஆலோசனையுடன் மண் பரிசோதனை உள்ளிட்ட ஆய்வு களை மேற்கொண்டனர். இந்த ஆய் வுகளின் பரிந்துரையின் அடிப்படை யில் கோத்தகிரி சாலையில் மண் ஆணி திட்டம் (“சாயில் நீலிங்”) செயல்படுத்த திட்டமிடப்பட்டது என்றார். “சாயில் நீலிங்” எனப்படும் மண் ஆணி அமைத்தல் என்பது மலை யில் செங்குத்தான சரிவில் மண் அரிப்பை தடுத்து நிலச்சரிவு ஏற் படாமல் இருக்க பயன்படுத்தப்ப டும் ஒரு நவீன தொழில்நுட்பமாகும். இந்த முறையில், மண் சரிவு ஏற்படுவதை தடுக்க சரிவான பகுதியில் 3 முதல் 5 மீட்டர் ஆழத் திற்கு துளை ஏற்படுத்தப்பட்டு, அதில் 32 மிமீ இரும்பு ராடை செலுத்தி, இயற்கை முறையில் மண் பிடிமானத்திற்கு உதவும் ஒரு வகை விரிப்பான் விரிக்கப்படு கிறது. அதன் மேல் கான்கிரீட் அமைக்கப்பட்டு மண்ணின் உறு தித்தன்மை அதிகரிக்கப்படுகிறது. தொடர்ந்து, “ஹைட்ரோ சீடிங்” முறையில் புற்கள் வளர்க்கப்பட்டு மண் சரிவு தடுக்கப்படுகிறது. “ஹைட்ரோ சீடிங்” முறையில் விதை, உரம் உள்ளிட்டவற்றை நீரில் கலந்து உருவாக்கும் விதைக் கலவையை குழாய் வழியாக செங்குத்தான மலைப்பகுதிகளில் செலுத்தி, ஜியோ கிரிட் எனப்படும் பாலிமர் பொருட்களால் செய்யப் பட்ட இரும்பு கம்பி புல்வெளி விரிப் பான் அமைத்து புல் விதைகள் விதைக்கப்பட்ட மேல் பகுதியில் பரப்பப்பட்டு மண் ஆணிகளுடன் இணைக்கப்படுகின்றன. இந்த நவீன முறை மண்ணை பலப்படுத்தி நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் தெரிவிக்கின்றனர்.