tamilnadu

யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள்

யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள்

தமிழக முதன்மை வனப்பாதுகாவலர் தகவல்

உதகை, செப்.21- யானைகள் நடமாட்டத்தை கண் காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய 12  கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட உள்ளதாக தமிழக முதன்மை வன பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள்  தாக்கி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், யானைகள் ஊருக்குள் வரும் சம்ப வங்கள் குறையவில்லை. இது தொடர்பாக தமிழக முதன்மை வன  பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா  செய்தியாளர்களிடம் கூறுகையில்,  கூடலூர் பகுதியில் யானைகளை  கண்காணிக்க 54 முன்னெச்சரிக்கை கருவிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் யானைகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதனை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் கூடிய 12 கண்காணிப்பு கேமராக்கள்  அப்பகுதிகளில் பொருத்தப்படவுள் ளது. இந்த கேமராக்கள் யானைக ளின் நடமாட்டத்தை, அதன் உடல் வெப்பத்தை பதிவு செய்து முன்னெச் சரிக்கை ஒலி எழுப்பும். இதுதவிர, யானை விரட்டும் பணியில் தற் போது, 92 பணியாளர்கள் உள்ள நிலையில், கூடுதலாக, 12 பேர் நிய மிக்கப்பட உள்ளனர். மேலும், பலாப்பழம் சீசன் கால மான ஜூன் மாதம் முதல் செப்டம் பர் மாதம் வரை யானைகளின் நட மாட்டம் மக்கள் வாழும் பகுதிகளில் அதிகமாக உள்ள நிலையில், அவை களை கண்காணிக்க கூடுதலாக  இந்த சமயங்களில் மட்டும் 40  பணியாளர்கள் நியமிக்கப்படுவார் கள். யானைகள் நடமாட்டத்தை கண் காணிக்க 12 தகவல் மற்றும் கண் காணிப்பு கட்டுப்பாட்டு மையங்கள்  இயங்கி வருகின்றன. இந்த மையங்க ளில் ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தப்ப டும். யானை விரட்டும் பணிகளில் உள்ளூர் இளைஞர்களை பயன்ப டுத்தப்பட உள்ளனர். அவர்கள் செல் போன்களின் வாயிலாக யானைக ளின் நடமாட்டத்தை பொதுமக்க ளுக்கு உடனடியாக தெரிவிப்பார் கள். கூடலூர், பந்தலூர் பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தை தீவிர மாக கண்காணிப்பார்கள். மேலும், வனத்துறையில் தற்போது 90 சதவி கிதம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள் ளன. விரைவில் அனைத்து பணியி டங்களும் நிரப்பப்படும். வரும் காலங்களில் மனித விலங்கு  மோதல் ஏற்படாமல் இருக்க தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  வனப்பகுதியில் தனியார் சார்பில் தேன் எடுப்பது குறித்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறி னார்.