tamilnadu

img

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அமைச்சர்

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அமைச்சர்

மேற்குவங்கத்தில் பல்கலைக் கழகத் தேர்தலை நடத்தக் கோரி மனு அளிக்க சென்ற மாணவர்கள் மீது காரை ஏற்றிய மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசின் கல்வி அமைச்சரைக் கண்டித்து திருப்பூரில் மாணவர்கள் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் கல்கிராஜ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கடந்த 12  ஆண்டுகளாக மேற்கு வங்கத் தில் உள்ள கல்லூரிகள் மற்றும்  பல்கலைக்கழகங்களில் தேர்தல்  நடத்தப்படவில்லை. இந்நிலை யில் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத் திற்கு சனியன்று அம்மாநில கல்வி  அமைச்சர் பிரத்யா பாசு சென்றி ருந்தார். அவரிடம் மாணவர்கள் பல் கலைக்கழக தேர்தலை நடத்தக்  கோரி மனு அளிக்கச் சென்றுள்ள னர். மாணவர்களின் கோரிக் கையை காது கொடுத்துக் கேட்கா மல் அமைச்சர் பொறுப்பற்ற முறை யில் நடந்து கொண்டார். மேலும் மாணவர்கள் மீது அமைச்சரின் காரை ஏற்றியதால் மாணவர்கள் காயமடைந்தனர். ஜனநாயகரீதியாக தேர்தல் நடத்தாததுடன், மாணவர்கள் மீது காரை ஏற்றிய இச்சம்பவத்தில் அமைச்சரைக் கண்டித்து திருப் பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மாணவர் சங்கத்தினர் கண்டன  முழக்கம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநி லத் தலைவர் தௌ.சம்சீர் அகமது,  மாவட்டச் செயலாளர் எஸ்.பிரவீன்  குமார் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி, நிர்வாகிகள் மணிகண்டன், விமல்ராஜ், நிஷா, பொன்னம்மாள், முகிலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.