மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்
கோவை, ஜூன் 12- உழைப்பாளி மக்களின் வாழ் வுரிமைக்கான கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் தழுவிய மார்க்சிஸ்ட் கட்சியினரின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெகு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வேலையின்மை, விலைவாசி உயர்வு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிப்பது, வகுப்பு கலவரத்தை உருவாக்கி மக்கள் ஒற்றுமையை சீரழிப்பது, கார்ப்ரேட் நலனுக்காக உழைப்பாளி மக்க ளின் உரிமைகளை காவு கொடுப் பது என தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசு மக்கள் விரோத நடவடிக்கை யில் ஈடுபட்டு வருகிறது. அதே போல மாநிலத்தில் ஆளும் அரசு, தங்களது தேர்தல் கால வாக்குறுதி களை நிறைவேற்றுவதிலும் சுனக் கம் காட்டுகிறது. இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை கண் டித்து மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு கிளர்ச்சிப்பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுத்து வருகிறது. இதன்ஒருபகுதியாக, கோவை யில், சிங்காநல்லூர் நகரக் குழு சார் பில் வரதராஜபுரம் -நீலிக்கோணம் பாளையம் பகுதியில் மக்கள் சந் திப்பு இயக்கம் எழுச்சியுடன் துவங் கியது. சிங்காநல்லூர் நகரகுழு செயலாளர் ஆர்.மூர்த்தி தலைமை யில் நடைபெற்ற பிரச்சாரப் பய ணத்தை மாவட்டக் குழு உறுப்பினர் தி.மணி துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.தெய் வேந்திரன் மற்றும் சிஐடியு நிர் வாகி கே.ரத்தினகுமார் உள்ளிட் டோர் உரையாற்றினர். இதில் திர ளானோர் பங்கேற்றனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், பெருந் துறை வட்டத்தில் வியாழனன்று நடைபெற்ற இயக்கத்திற்கு தாலுகா செயலாளர் ஆர்.அர்ச் சுனன் தலைமை வகித்தார். மேட்டுக் கடையில் தொடங்கிய பிரச்சார இயக்கத்தை மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தொடங்கி வைத் தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.சுந்தரராசன் சிறப்புரையாற்றி னார். திங்களூர், விஜயமங்கலம், சரளை உள்ளிட்ட பெருந்துறை நக ரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் பிரச் சாரம் நடைபெற்றது. இறுதியில் பெருந்துறை பேருந்து நிலையத் தில் பிரச்சாரம் நிறைவடைந்தது. தருமபுரி தருமபுரி மாவட்டம், பாப்பாரப் பட்டி பகுதியில் இருசக்கர வாகனத் தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக் கம் நடைபெற்றது. பிரச்சாரத் திற்கு பகுதிக்குழு செயலாளர் சக்தி வேல் தலைமை வகித்தார். இதில், மாநிலக் குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே. விசுவநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். சின்னசாமி உள் ளிட்டோர் பங்கேற்றனர். பெரியூரில் துவங்கிய பிரச்சா ரம் பிக்கிலி,வாரக்கொல்லை, திரு மல்வாடி கிட்டம்பட்டி உள்ளிட்ட பல் வேறு கிராமங்களில் நடைபெற் றது.