108 ஆம்புலன்ஸ் ஊழியரை தாக்கியவர் கைது
கோவை, மார்ச் 13 - கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியரை தாக்கியவர் மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள் ளார். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் 108 ஆம்பு லன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வரும் தமிழரசன் கடந்த 7 ஆம் தேதி பணியில் இருந்தபோது இரவு கருமத்தம்பட்டி மகா லட்சுமி நகர் அருகே இருந்து வந்த அவசர அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ளார். அங்கு குடும்ப தகராறில் மனைவியை கணவன் தாக்கிய தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சை அளித்த போது அவருடைய 5 வயது மகன் தாயுடன் இருந்துள் ளான். அப்போது குழந்தையின் தந்தை குழந்தையை அழைத் துச் செல்லக்கூடாது என்றும் தன்னுடன் விட்டுவிட்டு செல்லும் படியும் கூறியுள்ளார். ஆனால், குழந்தையோ தாயுடன் தான் செல்வேன் என்று அழுததால் தமிழரசன் அந்த பெண்ணின் கணவரிடம் மருத்து வமனைக்கு வந்து சிகிச்சை பார்த்துவிட்டு, குழந்தையை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த பெண்ணின் கணவர் தமிழரசனை தகாத வார்த்தையில் திட்டி யும், தென்னை மட்டையை கொண்டு பலமாக தாக்கியுள் ளார். இதில் தமிழரசன் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள் ளது. இது குறித்து தமிழரசன் அளித்த புகாரின் அடிப்படை யில் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில், மருத்துவ பாது காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆம்புலன்ஸ் ஊழி யரை தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்த னர்.
சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து நாமக்கல்,
மார்ச் 13- வெப்படை பகுதியிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை யாகின. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில், சக்திவேல் என்பவருக்கு சொந்தமான கல்கி சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் ஊழி யர்கள் புதனன்று இரவு வியாபாரம் முடித்துக் கொண்டு, கடையை பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில், வியாழ னன்று அதிகாலையில் சூப்பர் மார்க்கெட்டின் பின்பகுதி யில் திடீரென புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை யில் நடந்து சென்றவர்கள் உடனடியாக சக்திவேலுக்கு அலை பேசியில் தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் சக்திவேல் வருவதற்குள் தீயானது மளமளவென பரவி கடை முழுவதும் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த வெப்படை தீய ணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, தீயை கட்டுப் படுத்த போராடினர். ஆனால், தீயானது வேகமாக பரவியதால் அருகிலிருந்த ஆட்டோ மொபைல்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் பரவியது. தொடர்ந்து, குமாரபாளை யம் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து, சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். மார்க்கெட்டிலிருந்த சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் முற்றிலும் தீக்கிரையாகின. மேலும், அருகிலிருந்த ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான வாகன உதிரிபாகங்கள் சேத மடைந்தன. இவ்விபத்தில் மொத்தம், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப் பட்டுள்ளது. இதுகுறித்து வெப்படை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலக சிறுநீரக தின விழிப்புணர்வு பேரணி
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழனன்று விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. உலக சிறுநீரக தினத்தையொட்டி கோவை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்து வர் நிர்மலா தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். “உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக உள்ளதா? முன் கூட்டியே கண்டறிந்து சிறுநீரக ஆரோக்கியத்தை பாது காக்கவும்” என்ற கருப்பொருளை மையமாக வைத்து இந்த பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் கலந்து கொண்ட மருத்து வர்கள், சிறுநீரக நோய்களின் அறிகுறிகள், தடுப்பு முறை கள் மற்றும் சிகிச்சைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி னர். மேலும், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், உடற் பயிற்சி மற்றும் போதுமான தண்ணீர் அருந்துவதன் முக்கி யத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். சிறுநீரக நோய்கள் குறித்த விழிப்புணர்வை மக்களி டையே ஏற்படுத்துவதும், சிறுநீரக ஆரோக்கியத்தை பாது காப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்த பேரணி சென்றது.
விபத்து: ஒருவர் பலி உதகை,
மார்ச் 13- உதகை கூடலூர் சாலையில் இருசக்கர வாகனமும் டேங் கர் லாரியும் மோதியதில் கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில், டி.ஆர் பஜார் அனுமாபுரம் பகுதியில் உதகை அரசு கலைக்கல்லூரியில் பயிலும் இரு மாணவர்கள் வியாழ னன்று இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதியதில் மிதுன்(18) சம் பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மற்றொரு மாணவரை அங்கிருந்தோர், ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனி டையே உயிரிழந்த மிதுன் சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து நடுவட்டம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.