கால்வாயிலிருந்து ஆண் சடலம் மீட்பு
நாமக்கல், ஜூன் 13- குமாரபாளையம் காவல் நிலையம் அருகே உள்ள சாக்கடை கால்வாயிலிருந்து ஆண் சடலம் மீட்கப்பட் டுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் நிலை யம் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தைக் காவல் துறையினர் வியாழனன்று கண்டனர். கால்வாய் ஆழ மான பகுதி என்பதால் குமாரபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சாக்கடை கால்வாய் உள்ளே இறங்கி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சாக் கடை கால்வாயில் விழுந்து உயிரிழந்த நபர் யார்? எப்படி அங்கே வந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.