tamilnadu

img

அரசியலமைப்பை பாதுகாப்போம்! கருத்தரங்கம்

அரசியலமைப்பை பாதுகாப்போம்! கருத்தரங்கம்

ஈரோடு, ஏப்.20- வாலிபர் சங்கத்தின் சார்பில், அம்பேத் கர் பிறந்தநாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் கொடுமுடி - மொடக் குறிச்சி தாலுகா ஒருங்கிணைப்புக்குழு சார் பில் ஞாயிறன்று கருத்தரங்கம் நடைபெற் றது. ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் சமு தாயக்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, சங்கத்தின் தாலுகா ஒருங்கிணைப்பாளர் எம்.லோகநாதன் தலைமை வகித்தார். பிர சாந்த் வரவேற்றார். விவசாயத் தொழிலாளர் சங்க செயலாளர் டி.தங்கவேல் துவக்கவுரை யாற்றினார். ஈரோடு உழைக்கும் மக்கள் தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுச்செய லாளர் சி.முருகேசன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் முத்துக்கண்ணன் உறுதிமொழி வாசித்து, உரையாற்றினார். இதில் பலர் கலந்து கொண்டு, ‘இந்திய அரசியலமைப்பு சட் டத்தை பாதுகாப்போம்’ என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.