வேளாண் பல்கலைக்கழகத்தில் சட்டமன்ற பொது கணக்குகள் குழுவினர் ஆய்வு
கோவை, ஜூலை 31- கோவை வேளாண் பல் கலைக்கழக தாவரவியல் பூங்காவில் தமிழ்நாடு சட்ட மன்ற பேரவை பொது கணக்குகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தாவர வியல் பூங்காவில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்குகள் குழுவினர் அப்துல் சமது, கே.ஆர்.ஜெயராம், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண மூர்த்தி, எஸ்.சேகர், சட்டப்பேரவை துணைச் செயலாளர் பால சீனிவாசன் ஆகியோர் குழுவின் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தாவரவியல் பூங்காவில் உள்ள செடி கொடிகள் பற்றியும் தற்பொழுது தாவ ரவியல் துறையில் மேற்கொண்டு வரும் ஆய்வுகள் குறித்தும் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்களிடம் அவர்கள் கேட்டறிந்த னர். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கா.கிரியப்பனவர் உள்ளிட்டோ ரும் உடனிருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த குழுவின் தலைவர் செல்வ பெருந் தகை, காலை முதல் வால்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வுகள் செய்தோம். புற்றுநோய் பரிசோதனையில் முதல் மாவட்ட மாக கோவை மாவட்டம் இருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது. ஆய்வுகள் மேற்கொள்ளும் போது குறைகளையும், குற்றங்களையும் கணக்காயர்கள் தொடர்ச்சியாக முன் வைக் கின்றனர். அதனை எல்லாம் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் தீர்க்க வேண்டும் என தெரி வித்தார்.