tamilnadu

img

நில அளவை அலுவலர் ஒன்றிப்பின் 48 மணி நேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

நில அளவை அலுவலர் ஒன்றிப்பின் 48 மணி நேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூலை 15- களப்பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், 48 மணிநேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் துவங்கியது. களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நீதிமன்ற நடைமுறை பயிற்சியை வழங்க வேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் 48 மணி நேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று துவங்கியது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கு.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ரா.கல்பனா, மாவட்டச் செயலாளர் சி.பிரபு, மாவட்டப் பொருளாளர் மா.முருகன் உள்ளிட்டோர்  கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை உட்பட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.