tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சாலை விபத்தில் கேரள நடிகரின் தந்தை பலி

தருமபுரி, ஜூன் 6- பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது சொகுசு கார் மோதியதில், கேரள நடிகரின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கேரளம் மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர் சின்டாம் சாக்கோ. இவர் தமிழ் சினிமாவில் குட் பேட் அக்லி, ஜிகர் தண்டா டபுள்எக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கொச்சியிலிருந்து பெங்களூருவிற்கு, குடும்பத்தினருடன் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். இவருடன் தந்தை  சிபிசாக்கோ (70), தாய் மரியம்கார்லஸ் (60), சகோதரர் ஜோகோ சாக் (36) ஆகியோரும் உடனிருந்தனர். காரை  கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த அனிஸ் (42) என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில், தருமபுரி மாவட்டம், பாலக் கோடு அருகே உள்ள பாறையூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரி மீது  சொகுசு கார் எதிர்பாரத விதமாக மோதியது. இதில் நடிக ரின் தந்தை சிபிசாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். ஓட்டுநரைத் தவிர மற்ற மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர் களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த சிபிசாக்கோவின் உடல் பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஈமு கோழி மோசடி: உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.7.89 கோடி அபராதம்

கோவை, ஜூன் 6– ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுசி ஈமு கோழி நிறு வன உரிமையாளருக்கு, ஈமு கோழி வளர்ப்பு மோசடி வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.7 கோடியே 89  லட்சம் அபராதமும் விதித்து கோவை முதலீட்டாளர் நலப் பாது காப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   கடந்த 2011-ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவைப் பூர்வீக மாகக் கொண்ட ஈமு கோழி வளர்ப்பு மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என விளம்பரப்படுத்தி, ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதலீட்டாளர்களிடம் பணம் பெறப்பட்டது. இதை நம்பி, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டு மின்றி, அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கா னோர் ஈமு கோழி வளர்ப்பு தொழிலில் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டுத் தொகையைத் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஈரோடு பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.   இதில், 385 முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று மோசடி  செய்த வழக்கு, கோவை முதலீட்டாளர் நலப் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் வெள்ளியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப் பட்டதையடுத்து, நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது. மேலும், இந்த அபராதத் தொகையை மேல்முறை யீட்டு காலம் முடிந்த பின்னர், பாதிக்கப்பட்ட 385 முதலீட்டா ளர்களுக்கு பகிர்ந்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாட்டியை அடித்து கொலை செய்தவர் கைது

சேலம், ஜூன் 6- தாரமங்கலம் அருகே மூதாட்டியை அடித்து கொலை செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள கருக்குப் பட்டி பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மனைவி ராஜம்மாள் (95). கணவர் இறந்துவிட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்த மான வீட்டில் ராஜம்மாள் வசித்து வந்தார். அவருக்கு உதவி யாக அவரது மகள் பழனியம்மாள் கடந்த சில வருடங்க ளாக உடனிருந்தார். இந்நிலையில், அவரது வீடு அருகே உள்ள அய்யனாரப்பன் கருப்பசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது கோவிலுக்கு சென்ற மூதாட்டி ராஜம்மாள் தனது பேரன் - பேத்திகள், உறவினர்களுடன் இருந்துவிட்டு மாலையில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்பின் தனது வீட்டில் உள்ள கட்டிலில் ராஜம்மாள் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து, மகள் பழனியம்மாள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். ராஜம்மா ளின் பேரன்களான சண்முகசுந்தரம், பாலகிருஷ்ணன் ஆகி யோர் மூதாட்டியின் தலையில் 2 இடங்களில் பலத்த காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் அவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களிடையே சல சலப்பு ஏற்பட்டு, தாரமங்கலம் காவல் துறையினருக்கு தக வல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீ சார், அடக்கம் செய்யும் வேலைகளை தடுத்து நிறுத்தி  ராஜம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் ஓமலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார், ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், ராஜம்மாளை அதேபகுதியைச் சேர்ந்த தொழிலாளி செல் லான் என்கிற செல்லதுரை (55) என்பவர் கொலை செய்தி ருப்பது தெரியவந்தது. குடிபோதையில் இருந்த செல்ல துரை, ராஜம்மாளின் வீட்டிற்கு சென்று வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இதைக்கண்ட அவர், செல்லதுரையை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்லதுரை தோசை கரண்டியால் ராஜம்மாளின் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு, தனது செருப்பை மறந்து அங்கேயே விட்டுவிட்டு சென்றதால் போலீசாரின் பிடியில் சிக்கி உள்ளார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து செல் லான் என்கிற செல்லதுரையை கைது செய்து போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணத்தை திருடிவிட்டதாக குற்றச்சாட்டு பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சேலம், ஜூன் 6- வீட்டிலிருந்த 100 ரூபாயை திருடி விட்டதாக தாயார் குற்றஞ்சாட்டிய நிலையில், பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு, லாங்கில்பேட் டையைச் சேர்ந்த சேகர் – லீமா தம்பதியின் மகன் அபிலேஷ் (14). ஏற்காட்டிலுள்ள தனி யார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில் வீட் டில் வைத்திருந்த நூறு ரூபாயைத் திருடி விட்டதாக அவரது தாய் லீமா காவல் நிலை யதிற்கு அபிலேஷை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். இந்நிலையில், மகனை காணவில்லை என ஏற்காடு காவல் நிலையத்தில் புதனன்று அவரது பெற்றோர் புகாரளித்தனர். அதன்பேரில் காவல் துறையி னர் மாணவரைத் தேடிவந்த நிலையில், அவர் தனது பள்ளி அருகே உள்ள மரத்தில் வியாழ னன்று தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந் துள்ளார். இதையடுத்து மாணவனின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணத்தை திருடிவிட்டதாக தாயார் குற்றஞ் சாட்டியதால், மனமுடைந்த பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப் படுகிறது.

சாதிப் பெயரைக்கூறி தாக்குதல்: 3 பேர் கைது

தருமபுரி, ஜூன் 6- பாலக்கோடு அருகே கூலித் தொழிலாளியின் மனைவியை சாதிப் பெயரைக்கூறி தாக்குதல் நடத்திய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே வசிக்கும் பழனியம்மாள் என்பவரிடம் மாதந்திர சீட்டு கட்டியுள்ளார். தொடர்ந்து பழனியம்மாளுக்கு ரூ.7 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். கடன் பெற்ற பழனியம்மாள் நீண்ட நாட்களாகியும் பணத்தை திருப்பி தராததால், அவர் கடனை திருப்பித்தரக்கோரி கேட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் பணத்தை கேட்க சென்ற அவரை, பழனியம்மாள், அவரது மகள் தேவிபிரியா (22) மற்றும் அவர்களது உறவினர்களான சங்கர் (32), ராஜேஸ்வரி (32) ஆகியோர், சாதிப் பெயரை சொல்லி இழிவாக பேசியதுடன், தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்தவர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு, பாலக்கோடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் பழனியம்மாள், சங்கர், ராஜேஸ்வரி ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பட்டாசுத் தொழிலாளர் தியாகச் சின்னம் திறப்பு

சிவகாசி, ஜூன் 6- சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்களின் தியாகத்தை  பறைசாற்றும் வகையில் நினை வுச் சின்னம் அமைக்கப்பட் டுள்ளது. அதனை நிதி, சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற் றத்துறை அமைச்சர் தங்கம்  தென்னரசு திறந்து வைத்தார்.  சிவகாசியில்  கார்னேஷன் சந் திப்பில் பட்டாசு தொழிலாளர்க ளின் உழைப்பையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ரூ.29 லட்சம் மதிப்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், அந்நினைவுச் சின்னம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்  தலைமை வகித்தார்.  மாநகராட்சி மேயர்  சங்கீதா இன்பம்,    சார் ஆட்சியர் ப்ரியா ரவிச்சந்திரன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். இந்நிகழ்வில், ஆணையாளர்  சரவணன்,  துணை மேயர்  விக்னேஷ் பிரியா,  முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர்  விவேகன் ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

அடிப்படை வசதியில்லாத பேருந்து நிலையம்: பயணிகள் அவதி

தருமபுரி, ஜூன் 6- கோட்டப்பட்டி பேருந்து நிலை யத்தை சீரமைத்து, அடிப்படை வசதி கள் செய்துதர வேண்டும், என அப் பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத் திற்குட்பட்ட கோட்டப்பட்டி கிராமம், மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமமாகும். இப்பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் மற்றும் சிற்றூர்கள், கோட்டப்பட்டி கிராமத்தையே மையமாக கொண்டுள் ளன. இக்கிராமத்திற்கு தருமபுரி, அரூர்,  திருவண்ணாமலை, வாழப்பாடி, சிட் லிங், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்க ளுக்கு செல்லும் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இக் கிராமத்தில் பேருந்து நிறுத்தத்திற்காக தனியாக சிறிய அளவிலான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், போதிய வசதிகள் இல்லாத நிலையில், பேருந்துகள் ஏதும் பேருந்து நிலையத்தின் உள்ளே வருவதில்லை. மெயின் ரோட்டிலேயே நிறுத்தி பய ணிகளை ஏற்றி செல்கின்றனர். இத னால், பயனற்ற நிலையில் உள்ள பேருந்து நிலையத்தின் பயணியர் நிழற் கூடம் மது அருந்துபவர்களின் இருப்பிட மாகவும், போதையில் படுத்துறங்கும் இடமாகவும் மாறியுள்ளது. இதனால் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி யாகியுள்ளது. எனவே, பேருந்து நிலை யத்தினை சீர்படுத்தி, அடிப்படை வச திகள் செய்து தர வேண்டும். பேருந்து கள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதை உறுதிப்படுத்த வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.