பட்டியலின மக்களின் கோரிக்கையை புறக்கணித்துவிட்டு சமூக நீதி பேசுவது திராவிட மாடல் அரசுக்கு அழகல்ல!
ஈரோடு மாநகராட்சியில் பணி யாற்றும் சுகாதாரத்துறை தொழி லாளர்களின் நியாயமான கோரிக் கையை தொடர்ந்து புறக்கணிக் கும் மாநகராட்சி நிர்வாகத்தின் நட வடிக்கை கடும் விமர்சனத்திற் குள்ளாகி உள்ளது. ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், குடி நீர் விநியோகம் செய்பவர்கள், ஓட் டுநர்கள், சுகாதார மேற்பார்வை யாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், பள்ளி மற்றும் மருத்துவமனை தூய்மைப் பணி யாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்க ணக்கானோர் பணியாற்றி வரு கின்றனர். இத்தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளாக, குறைந்த பட்ச ஊதிய சட்ட அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும். நிரந் தரப்படுத்தப்பட்ட தொழிலாளர்க ளுக்கு இணையான சேமநல நிதி, ஓய்வு கால பலன்கள் மற்றும் விடுப் புகள் வழங்க வேண்டும். ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் குறைந்தபட்ச ஊதிய அரசாணையை அமல்படுத்த வேண் டும் என்பதே. இக்கோரிக்கைக் காக, சிஐடியு சார்பில் பல ஆண்டு களாக கோரிக்கை மனுக்கள் அளித் தும், மாவட்ட ஆட்சியரிடம் முறை யிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. மேலும், பணியி டங்களில் பாரபட்சமான அணுகு முறைகள் நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது என தொழிலாளர் கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இத்தொழிலாளர் கள் கூறுகையில், பள்ளிகளில் பணி யாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணி யாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் ரூ.28,401 என்றும், நாள் ஒன்றுக்கு ரூ.1,078 என்றும் நிர்ணயிக்கப்பட் டுள்ள நிலையில், 60 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு 250 டன் குப்பை களை சுத்தம் செய்யும் தொழிலா ளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவது பாரபட்சமானது. இதனை கண்டித்து, சிஐடியு சார் பில் கடந்த 24.12.2024 முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. தொழி லாளர் உதவி ஆணையர் (சமரசம்) அழைப்பின் பேரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கைகளுக்கு எழுத்துப்பூர்வமான அறிக்கை அளிக்க வேண்டும் என்று தொழி லாளர்கள் வலியுறுத்தினர். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த் தையை புறக்கணித்து காலதாம தம் செய்து வருகிறது. கடந்த ஆண் டில் 11 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாத நிலையில், 2025-26 ஆம் ஆண்டிற்கான அக விலைப்படி உயர்வை தொழிலா ளர் துறை அறிவித்துள்ளது. அதன் படி, 1.4.2025 முதல் மாதமொன் றிற்கு ரூ.6,780 அகவிலைப் படியாக வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை யில் உறுதியாக போராடுவோம் என்றனர். சமூக நீதியை உயர்த்திப் பிடிப் பதாக சொல்லும் திராவிட மாடல் அரசின் ஆட்சிக் காலத்தில், பொது சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் பட்டியலின மக்களின் கோரிக்கை களை புறக்கணிப்பது சரியல்ல என்பதே முற்போக்காளர்களின் பார்வையாக உள்ளது.