நில அளவைத் துறையில் முறைகேடு ஆட்சியர் அலுவலகம் முன்பு கவுன்சிலர் தர்ணா!
கோவை நில அளவைத்துறையில் தொடர்ந்து முறைகேடு நடைபெறு வதாக குற்றம்சாட்டி, கோவை மாநக ராட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆட்சி யர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகரம் வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான கே.புரு சோத்தமனின் மனைவி மல்லிகா புரு சோத்தமன், தற்போது 43-வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவ ரது மகள் பெயரில் விளாங்குறிச்சி கிரா மத்தில் உள்ள 283 சதுர மீட்டர் நிலம், நகர நில அளவை வரைபடத்தில் 200 சதுர மீட்டர் எனக் குறிப்பிடப்பட்டுள் ளது. மேலும், அந்த வரைபடத்திலேயே 14.25 × 19 = 200 என்று தவறாகக் கணக் கிடப்பட்டுள்ளது. உண்மையில் இது 271 சதுர மீட்டர் ஆகும். இந்த அளவை சரி செய்யக்கோரி கே.புருசோத்தமன் கடந்த நான்கு ஆண்டுகளாக அதிகாரி களை அணுகியும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இத னால் விரக்தியடைந்த அவர், தனது மனைவியுடன் திங்களன் காலை 11 மணி யளவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதேபோன்று, கோவை கரட்டு மேடு பகுதியைச் சேர்ந்த சி.குழந்தை வேல் என்பவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் தனது பூமி, நில அளவைத் துறை பதிவேடுகளில் வேறு பெயரில் உள்ளதாகக் கூறி வேதனை தெரிவிக்கிறார். இதேபோன்று சூலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கருப்புசாமி என அடுத்தடுத்து நில அளவைத்துறையின் மீது தொடர்ச்சியான புகார்களை தெரி வித்தனர். இதுகுறித்து விசாரிக்கையில், நில அளவைத் துறையின் மீது நம்பிக்கை குறைந்துள்ளது. வாரந்தோறும் மாவட்ட ஆட்சியரிடம் பத்து முதல் பதினைந்து மனுக்கள் வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நில அளவையர் முதல் ஏ.டி. சர்வேயர் வரை ஊழல் மலிந்துவிட்டது. இதனால் அரசுக்கு பெரும் கெட்ட பெயர் ஏற் பட்டுள்ளது. அரசு இதில் தனிக்கவனம் செலுத்த தவறினால் நிலைமை மேலும் மோசமடையும் என பொதுமக்கள் எச்சரிக்கின்றனர்.