நியாய விலைக்கடைகளில் இணைய சேவை குறைபாடு
பெரும் அவதிக்குள்ளாகும் மக்களும்,
கோவை, ஜூன் 6 – நியாய விலைக் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்க குடும்ப அட்டைதாரர் கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுகிறது. இணைய சேவை வேகம் குறைவாக இருப்ப தும், எடை இயந்திரத்தோடு, இணையத்தை இனைத்ததே இந்தக் காத்திருப்புக்குக் கார ணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்ற னர். கோவை வட்டத்தில் மொத்தம் 1,542 நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின் றன. இவற்றில் 1,253 முழுநேர நியாய விலைக் கடைகளும், 289 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் அடங்கும். இக்கடைகள் மூலம் சுமார் 11 லட்சத்து 41 ஆயிரத்து 886 குடும்ப அட்டைகளைப் பயன்படுத்தி 34 லட்சம் மக்கள் ரேஷன் பொருட்களைப் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். மின்னணு எடை இயந்திரங்களால் ஒரு புதிய சிக்கல் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க் கரை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப் பட்டு வருகின்றன. பொருட்கள் எடை குறை வாக வழங்கப்படுவதாகக் கடந்த காலங்க ளில் தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு நியாய விலைக் கடைகளில் மின்னணு பில்லிங் இயந்திரத்துடன் மின் தராசை இணைத்துள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி, ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைரேகை யைப் பதிவு செய்தால் மட்டுமே ரசீது வரும். மேலும், எந்த அளவு எடைக்கு பொருட்கள் வைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கான பில் மட்டுமே உருவாக்கப்படும். இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் சரியான எடைக்கு பொருட்களை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது முறைகேடுகளைத் தடுக்க ஒரு நல்ல முயற்சி என்றாலும், இணைய சேவை வேகம் குறைவாக இருப்பதால் புதிய சிக்கல் எழுந்துள்ளது. இணைய சேவை மந்தத்தால் மக்கள் அவதி புதிய மின்னணு பில்லிங் முறைக்கு வேகமான இணைய சேவை அத்தியாவசி யம். ஆனால், பல ரேஷன் கடைகளில் இணைய சேவை வேகம் மிகவும் மந்தமாக உள்ளது. இதனால், ஒவ்வொரு வாடிக்கை யாளருக்கும் பொருட்களை வழங்க அதிக நேரம் ஆகிறது. சில நேரங்களில், கைரேகை பதிவு செய்ய அல்லது பில் தயாரிக்க நீண்ட நேரம் ஏற்படுகிறது. இணைய சேவை வேகம் குறைவாக இருப்பதால், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பொருட்கள் வழங் கப்படும் வேகம் மாறுபடுகிறது. இதன் விளைவாக, மக்கள் நீண்ட வரிசையில் காத் திருக்க நேரிடுகிறது. இந்தக் காத்திருப்பு கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பல நியாய விலைக் கடைகளில் பரவலாகக் காணப்படுகிறது. அரசின் இந்த முயற்சி முறைகேடுகளைத் தடுக்க உதவும் என்றாலும், இணைய உள் கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே மக்களுக்கு ஏற்படும் சிரமங்க ளைக் குறைக்க முடியும் என்பதே மக்க ளின் எதிர்பார்ப்பாக உள்ளது. (நநி)