tamilnadu

img

இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாடு

இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாடு

கோவை, ஜூன் 28 – தொழிலாளர் உரிமை காக்கும் ஜூலை 9 அகில இந்திய வேலை  நிறுத்த போராட்டத்தை வெற்றிகர மாக்குவோம் என இன்சூரன்ஸ் ஊழி யர் சங்க மாநாடு தீர்மானம் நிறைவேற் றியுள்ளது. இன்சூரன்சு கார்ப்பரேசன் ஊழியர் சங்க கோவைப் பகுதி 66 ஆவது ஆண்டு மாநாடு மற்றும் 39 ஆவது பொதுக்குழு கூட்டம் சனியன்று துவங் கியது. நிகழ்விற்கு தலைவர் பி.வி.குமார் தலைமை தாங்கினார்.  பொது  மாநாட்டில் அகில இந்திய இன்சூரன்ஸ்  ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செய லாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா துவக்க உரை யாற்றினார். அகில இந்திய இணைச் செயலாளர் எம்.கிரிஜா மாநாட்டை வாழ்த்தி பேசினார்.  மாநாட்டில், தென்மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்  தலைவர் சி.முத்துக்குமாரசாமி, பொரு ளாளர் எஸ்.சிவசுப்பிரமணியன், துணைச் செயலாளர் வி.சுரேஷ், கோவை கோட்ட பொதுச்செயலாளர் துளசிதரன் உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில், மத்திய தொழிற் சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ள ஜூலை 9 அகில இந்திய வேலை நிறுத்த  போராட்டத்தை எல்ஐசி ஊழியர்கள்  நூறு சதவிகிதம் வெற்றிகரமாக்கு வோம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முன்னதாக, பொது மாநாட்டின் நிறைவில் எல்ஐசி ஊழியராக பணி புரிந்து பணி ஓய்வு பெறும் இன்சூ ரன்ஸ் கார்ப்பரேஷன் ஊழியர் சங்கத் தின் கோவை பகுதி இணைச் செயலா ளரும், தமுஎகச மாநில குழு உறுப்பின ருமான கவிஞர் உமா மகேஸ்வரி அவர் களின் பணி நிறைவு பாராட்டு விழா  நடைபெற்றது. இதில் தென் மண்டல  இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின்  துணைத் தலைவர் சி.முத்துக்குமார சாமி  நினைவு பரிசு வழங்கி வாழ்த்தி  பேசினார்.