tamilnadu

img

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிடுக: தையல் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிடுக: தையல் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஏப்.21- நலவாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதி யத்தை ரூ.1500 ஆக உயர்த்தி வழங்க வேண் டும், என வலியுறுத்தி கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தையல் கலைஞர்களுக்கு ஓய்வூதி யத்தை ரூ.1500 ஆக உயர்த்தி வழங்க வேண் டும். நலவாரியம் வழங்கும் பணப்பயன்கள் அனைத்தும் அனைத்து வாரியங்களிலும் பாகுபாடு இல்லாமல் உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியம் முறையாக கால தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். தேர் தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண் டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங் கத்தினர் திங்களன்று, ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த  ஆர்ப்பாட்டத்திற்க, சங்கத்தின் பொதுச்செய லாளர் ஆர்.வேலுசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.சந்தி ரன், மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, தையல் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மனோகரன் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர். இதில், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரத்தினகுமார், ஆட் டோத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் எம்.கே.முத்துகுமார், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜான்அந்தோனி ராஜ், தங்கநகை தொழிலாளர் யூனியன் பொதுச்செயலாளர் பி.சந்திரன், தையல் கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் எஸ்.ஆண் டாள், கு.லலிதா, பி.வெள்ளிங்கிரி, எம்.மணி மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.