ஆற்றங்கரையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
நாமக்கல், ஆக.22- கொல்லிமலை அடிவாரம் அருகே ஆற்றின் கரையோரத் தில் கொட்டப்படும் குப்பைக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற் படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், வாழவந்தி கோம்பை ஊராட்சியில், கொல்லிமலை அடிவாரப் பகுதி யான காரவள்ளியில் நக்கை ஆறு உள்ளது. நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் வழியாக கொல்லிமலைக்குச் செல் லும் பிரதான நெடுஞ்சாலையோரத்தில் இந்த ஆறு செல்கி றது. கொல்லிமலையில் தொடர் மழை காலங்களில், அங்கி ருந்து வெளியேறும் மழைநீர், நக்கை ஆறு வழியாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று பெரிய ஆற்றில் கலக்கிறது. இதன் மூலம் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பாக்கு விவ சாயம் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக கார வள்ளி பகுதியிலுள்ள உணவகங்கள், தேநீர் கடைகள், இறைச்சி கடைகள் ஆகியவற்றில் வெளியேறும் கழிவுப் பொருட்கள் அனைத்தும் ஆற்றின் கரையோரத்தில் கொட்டப் பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைப்பதால் எழும் புகையால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கொல்லிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்று லாப் பயணிகள் காரவள்ளி வழியாக செல்கின்றனர். நீண்ட தொலைவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் காரவள்ளி யில் வாகனங்களை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு கொல்லிமலைக்கு செல்கின்றனர். நக்கை ஆற்றின் ஓரத்தில் ஓய்வெடுக்கும் பொழுது கரையோரத்தில் கொட்டப் பட்ட கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக சுற்றுலாப் பயணி கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், அடிவாரப் பகுதியில் உள்ள கடைகளில் சேகர மாகும் கழிவுப்பொருட்கள் அனைத்தும் ஆற்றங்கரையில் கொட்டப்படுவதால் ஆறு மாசுபடுகிறது. மேலும், அடையா ளம் தெரியாத நபர்கள் தீ வைத்து விட்டு செல்வதால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.