மின்சாரம் தாக்கி விவசாயி பலி
கோவை, மே 8- கன்றுக்குட்டி மின்சாரம் தாக்கியதால் அலறிய தைக் கேட்டு காப்பாற்ற முயன்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள நடுப்பாளை யம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர், வியாழனன்று காலை தனது தோட்டத்தில் மாடுகளை அவிழ்த்துவிட்டு தண்ணீர் வைக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக, அருகில் அறுந்து கிடந்த கிணற்று மேட்டிற்கான எர்த் லைன் வயரை அவரது கன்றுக்குட்டி வாயால் கடித்துள்ளது. இதில் மின்சா ரம் தாக்கி கன்றுக்குட்டி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே விழுந்தது. கன்றுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்டு பதறிப்போன விவசாயி மணி, உடனடியாக அதனை காப்பாற்றும் முயற்சி யில் இறங்கினார். ஆனால் எதிர்பாராத விதமாக அவருக் கும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
தேங்கியுள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு
நாமக்கல், மே 8- மல்லசமுத்திரம் காவல் நிலையம் அருகே நீண்ட நாட்க ளாக தேங்கியுள்ள குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் காவல் நிலையம் சேலம் சாலையில் உள் ளது. இதனருகே நீண்ட நாட்களாக மூட்டை மூட்டையாக குப்பை கழிவுகள் காணப்படுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இவ்வழியாக செல்லும் மக்கள் துர்நாற்றம் தாங்கமுடியாமல் சுவாச கோளாறுகள் ஏற்பட்டு அவதிக் குள்ளாகி வருகின்றனர். மேலும், குப்பையிலுள்ள பிளாஸ் டிக் பொருட்கள் காற்றில் பறந்து அருகிலுள்ள குடியி ருப்புகளுக்குள் விழுகிறது. எனவே, இவ்விடத்தில் உள்ள குப்பைகளை அகற்றி, குப்பைகளை கொட்டாமல் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழில் பெயர் பலகை வைக்கவிட்டால் அபராதம்
நாமக்கல், மே 8- கடைக்கு தமிழில் பெயர் பலகை வைக்கவிட்டால் அப ராதம் விதிக்கப்படும், என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத் துள்ளனர். தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், மே 15 ஆம் தேதிக் குள் அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், நாமக்கல் மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையில், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் முத்து முன்னிலையில் தமிழில் பெயர் பலகை அமைப்பது குறித்தான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி கூட்டரங்கில் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மே 15 ஆம் தேதிக்குள் அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தவறும்பட்சத்தில் வணிக நிறுவனங்க ளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். எனவே வணிக நிறுவன உரிமையாளர்கள் தங்களது நிறுவன பெயர் பலகை களை தமிழில் அமைக்க வேண்டும், என தெரிவிக்கப்பட் டது.
கோவை மாவட்டம், குனியமுத்தூர் செங்குளம், சின்னகுளம் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரி யப்பனவர் துவக்கி வியாழனன்று வைத்தார். துணை மேயர் வெற்றிச்செல்வன், தெற்கு மண்டலக்குழு தலைவர் தன லட்சுமி, மாநகராட்சி துணை ஆணையர் குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மே 12 ஆம் தேதி பொறியியலாளர் வேலை நிறுத்தம்
சேலம், மே 8- கட்டுமானப் பொருட்களின் விலை உயர் வைக் கண்டித்து, மே 12 ஆம் தேதியன்று வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளதென, பொறியியலாளர் சங்கத்தினர் தெரிவித் துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியியளார்கள் சங்கத்தின் கூட் டமைப்பு மாநிலத் தலைவர் விஜயபானு, செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகி கள் சேலம் சிவில் இன்ஜினியரிங் அசோசியே சன் ஹாலில் புதனன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகை யில், கடந்த ஒரு வருட கால இடைவெளியில் கல்குவாரி உரிமையாளர்கள் எம்.சான்ட், பி.சான்ட், ஜல்லி கற்கள் விலையை அபரி தமாக தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். இந்த விலை உயர்வால் கட்டுமானத் தொழி லில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், ஒப்பந்த தாரர்கள். பொறியியலாளர்கள், பொதுமக் கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கல் குவாரி உரிமையாளர்களின் அநியாயமான விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். அரசாங்கம் தரமான எம்.சான்ட், பி.சான்ட், ஜல்லி கற்களை நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்று மணல் குவாரிகளை திறக்க வேண் டும். கட்டுமானப் பொருட்களை அத்தியா வசிய பட்டியலில் கொண்டு வர வேண்டும். கட்டுமானப் பொருட்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும், என வலியு றுத்தி மே 12 ஆம் தேதியன்று கட்டுமான தொழில் அமைப்புகள் சார்பில், மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள் ளது. மேலும், கட்டுமானப் பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் வராத பட்சத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை மேலும் தொடர் போராட்டமாக மேற்கொள்ளவுள்ளோம், என தெரிவித்தனர்.
குறைதீர் கூட்டம்
சேலம், மே 8- சேலம் மாவட்ட பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்து தரப்பு மக்கள் பயன்பெறும் வகை யில், மாதத்தின் 2 ஆவது சனிக்கிழமை குறைதீர் கூட் டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மே மாதத்திற் கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் கூட் டம், மே 10 ஆம் தேதியன்று (நாளை) ஒவ்வொரு வட்டாட் சியர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. இக்கூட் டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது குறை களை வட்ட வழங்கல் அலுவ லரிடம் கூறலாம், என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.