tamilnadu

img

3 மாத பேரக் குழந்தையை கொன்று விட்டு தப்பியோடிய பாட்டிக்கு போலீசார் வலைவீச்சு  

கோவையில் 3 மாத ஆண் குழந்தையை கொன்றுவிட்டு, 3 மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கி விட்டு தப்பிச் சென்ற பாட்டியை போலீசார் தேடி வருகின்றன.  

கோவை – கவுண்டம்பாளையம் சேரன் நகரை சேர்ந்த பாஸ்கரன், ஐஸ்வர்யா தம்பதிக்கு 3 மாத ஆண், பெண் இரட்டை குழந்தைகள் உள்ளன. நேற்று இரவு இரு குழந்தைகளையும் பாட்டி சாந்தியுடன் தாய் ஐஸ்வர்யா விட்டு சென்றுள்ளார். வீடு திரும்பிய தாய் ஐஸ்வர்யா இரு குழந்தைகள் காயங்களுடன் மயங்கிய நிலையில் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.  

அதனை தொடர்ந்து இரு குழந்தைகளையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் ஆண் குழந்தை உயிரிழந்ததாகவும் பெண் குழந்தையின் கையில் முறிவு ஏற்பட்டதும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது பாட்டியே பேரனை கொன்றதாகவும் பேத்தியை தாக்கியதும் விசாரணையில் தெரிந்தது.  மேலும் காணாமல் போன சாந்தியை துடியலூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக சாந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

;