tamilnadu

img

அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நாமக்கல்

அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நாமக்கல்

, மார்ச் 14- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை மாணவிகள் 1,091 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள கவிஞர் ராம லிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் 2024 - 25 ஆம் ஆண்டிற் கான பட்டமளிப்பு விழா வியாழனன்று நடைபெற்றது. பெரி யார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற இக்கல்லூரி யில் நடைபெற்ற 17 ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு, ஆங் கிலத்துறை தலைவர் செ.அலெக்சாண்டர் தலைமை வகித் தார். கல்லூரி முதல்வர் மா.கோவிந்தராசு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பொருளியல் துறை மாணவி ஏ.கார்த்திகா முதுகலைப் பொருளியல் பிரிவில் பெரியார் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதலிடம், இளங் கலை பொருளியல் பிரிவில் மாணவி ப.பவித்ரா மூன்றாம் இடத்தையும், முதுகலை வரலாற்று பிரிவில் புவனப்பிரியா நான்காம் இடத்தையும், ஊட்டச்சத்து, உணவுக் கட்டுப் பாட்டியல் துறையில் முதுநிலை பிரிவு மாணவி ரவீனா இரண் டாமிடத்தையும், சுவாதி மூன்றாமிடத்தையும் பெற்று கல்லூ ரிக்கு பெருமை சோ்த்தனர். 13 துறைகளைச் சேர்ந்த முது நிலை, முதுகலை இளநிலை, இளங்கலை மாணவிகள் மொத்தம் 1,091 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

நுரையீரல் குழாயில் அடைப்பு: ஐவிசி பில்டர் பொருத்தி சாதனை

சேலம், மார்ச் 14- நுரையீரல் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்ட பெண் ணுக்கு, வெற்றிகரமாக ஐவிசி பில்டர் கருவி பொருத்தி சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைந்த னர். இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் தேவிமீனாள் வியாழனன்று செய்தியாளர் களிடம் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமதி (40) என்பவர், நுரையீரல் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற் பட்டு, வலது காலில் ‘ஹெமாஞ்சியோமா’ எனப்படும் அதீத ரத்தக்குழாய் வளர்ச்சி மற்றும் இரண்டு கால்களிலும் ரத்தம் உறைதலால் பாதிக்கப்பட்டார். இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்ட அவருக்கு, ஸ்ட்ரெப்டோகி னேஸ் எனப்படும் ரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்தை  செலுத்தி, நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு சரி செய்யப் பட்டது. ஆனால், அவரது காலில் இருந்த ரத்தக்குழாய் அடைப்பானது தகுந்த சிகிச்சை அளித்தும் குறையாமல் இருந்ததால், ஐவிசி பில்டர் பொருத்தப்பட்டது. இதே போல, வனிதா (64) என்பவர் நுரையீரல் ரத்தக்குழாயில் ஏற் பட்ட அடைப்பினால் பாதிக்கப்பட்டு இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த உறைதலைத் தடுக்கும் மருந்து அளிக்கப்பட்டது. ஆனால், அவரது ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததால், மெக்கானிக்கல் த்ராம்பெக்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, ரத்தக்கட்டி அகற்றப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர், அவரது ரத்த அழுத்தம் சீரானது. இந்த உயரிய சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும், என்றார்.

ஆய்வக நுட்புணர் தினக் கொண்டாட்டம்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், வெள்ளியன்று ஆய்வக நுட்புணர் தினம் கொண்டாடப்பட்டது. ஆய்வகங்களில் பணியாற்றும் நுட்புணர்களின் பங்க ளிப்பை அங்கீகரிக்கும் விதமாக, ஆய்வக நுட்புணர்கள் தினம் (Laboratory Technologists Day) கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வக  நுட்புணர்கள் தினம் வெள்ளியன்று கேக் வெட்டி கொண்டா டப்பட்டது. கடந்தாண்டு சிறப்பாக பணிபுரிந்த ஆய்வக நுட்புணர்களை மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி ஆகியோர் பாராட் டினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.