tamilnadu

img

இஎஸ்ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறியும் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தனக்கு தெரிந்தவர் என கூறியும் 15 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் தனது  15 ஆண்டு கால நண்பரான பிரதீப், அவரது நண்பரான தன்யா என்பவரை இ.எஸ்.ஐ மருத்துவமனை மருத்துவர் என்று கூறியும் மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாகவும் 15 லட்சம் ரூபாயை ஏமாற்றி விட்டதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து முருகன் தெரிவிக்கையில் தன்யா அரசு துறையில் பணம் கொடுத்து வேலை வாங்கி தருபவர் என்றும் கூறி பிரதீப் தன்னிடம் அறிமுகப்படுத்தியதாகவும், இதனை நம்பி தனக்கும் தனது தம்பிக்கும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தர 15 லட்சம் செலவாகும் எனவும், அவர்களை நம்பி தான் மூன்று தவணையாக 15 லட்சத்தை நேரிலும் வங்கி பரிவர்த்தனை மூலமும் வழங்கியபின் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அவர்களிடம் கேட்கும் போது தன்யா தனக்கு கோவை காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் ஆகியோர் நன்கு பழக்கமானவர்கள் எனவும், யாரிடம் புகார் தெரிவித்தாலும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறி மிரட்டுவதாக தெரிவித்தனர்.  எனவே தனது பணத்தை அவர்களிடமிருந்து மீட்டு தர வேண்டும் எனவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.
மேலும் இதே போல் பலரிடம் சுமார் 40 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.