மலர் கண்காட்சி பணிகள் தீவிரம் இன்று முதல்வர் துவக்கி வைக்கிறார்
உதகை, மே 14 - உதகை தாவரவியல் பூங்காவில் 127 ஆவது மலர் கண் காட்சியை தமிழக முதல்வர் இன்று துவக்கி வைக்கின்ற நிலையில், புதனன்று மலர் கண்காட்சி தயார்படுத்தும் பணி கள் தீவிரமாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்கா வில் கோடை சீசனை ஒட்டி பிரசித்தி பெற்ற மலர் கண்காட்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. நடப்பாண்டிக்கான 127 ஆவது மலர்கண்காட்சி இன்று (வியாழனன்று) தமிழக முதல் வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். பூங்காவில் சுற்றுலாப் பய ணிகளை மகிழ்விக்க சுமார் 7.50 லட்சம் கார்னேஷன், கொய் மலர் மற்றும் ரோஜா மலர்களை கொண்டு பொன்னியின் செல் வன் கோட்டை , படகு அலங்காரம், மயில் ரதம், யானை, கார் டூன் பொம்மைகளின் வடிவங்கள் அமைக்கப்பட்டு வருகி றது. மேலும், 45 ஆயிரம் மலர் தொட்டிகளில் டேலியா, கார் னேஷன், லில்லி மலர்கள் உள்ளிட்ட மலர்களால் வடிவமைக் கப்பட்ட சிம்மாசனம் தயார் செய்யப்பட்டு வருகிறது. வெளி நாடு, வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மற் றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநா தன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, ஆ.ராசா எம்.பி, அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், வேளாண் உற்பத்தி ஆணையர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் நிஷா, முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் கிருபா சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
சேலம் மத்திய சிறை காவலர் பணியிடைநீக்கம்
சேலம், மே 14- சேலம் மத்திய சிறை பேக்கரியில் முறைகேடு செய்த சிறைக்காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மத்திய சிறையில் 1,250க்கும் மேற்பட்ட கைதி கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக சிறையில் பேக் கரி செயல்பட்டு வருகிறது. கைதிகள் தயாரிக்கும் மிக்சர், பிஸ்கெட், லட்டு, பிரட் உள்ளிட்டவை சிறை கைதிகளுக் கும், பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. இந்த பேக்கரியில் இரண்டாம் நிலை காவலர் சுப்பிர மணியம் (35) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கைதி களுக்கு பொருட்களை விற்பனை செய்ததுடன், அந்த பணத்தை சிறைக்கு கணக்கு காட்ட வேண்டும். ஆனால், அவர் பணத்தை ‘ஜிபே’ மூலம் அனுப்புமாறு கூறியுள் ளார். அதன்படியே, கடந்த ஓராண்டாக அவர் கூறிய ‘ஜிபே’ எண்ணுக்கு பணம் சென்றுள்ளது. இதுதொடர்பாக கிடைத்த தகவலின்பேரில், சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுப்பிரமணியம் கூறிய கைப்பேசி எண் யாருடையது என விசா ரித்தபோது, அவரது மாமியார் பெயரில் இருந்தது தெரிய வந்தது. இவ்வாறு ஜிபே மூலம் ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் வரை சென்றிருந்தது. இந்த பணம் அனைத்தும் சிறை கணக் கிற்கு வந்திருக்க வேண்டும். இதையடுத்து, சிறைக்காவலர் சுப்பிரமணியத்தை பணியிடை நீக்கம் செய்து சேலம் சிறை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டுள்ளார்.
அணைகள் நிலவரம் பவானிசாகர் அணை நீர்மட்டம்
:68.56/105அடி நீர்வரத்து:2377கனஅடி நீர்திறப்பு:155கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:1.98/160 அடி நீர்வரத்து:9.96கனஅடிl நீர்திறப்பு:9.96கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:32.38/72 அடி நீர்வரத்து:129கனஅடி நீர்திறப்பு:1130கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:73.75/120அடி நீர்வரத்து:232கனஅடி நீர்திறப்பு:56கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:40.27/60அடி நீர்வரத்து:833கனஅடி நீர்திறப்பு:325கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்: 47.41/90அடி நீர்வரத்து:5கனஅடி நீர்திறப்பு:43கனஅடி
ஒளிரும் போர்டுகளை மறைத்து பேனர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாமக்கல், மே 14- குமாரபாளையத்தில் ஒளிரும் போர்டுகளை மறைத்து பேனர்கள் வைப்பதால் விபத்து ஏற்படும் அபா யம் நிலவுகிறது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யத்தில் சாலையில் ஒளிரும் போர்டை மறைக்கும் விதமாக கண்ணீர் அஞ் சலி பிளக்ஸ் பேனர்கள், தொழில் நிறு வன பேனர்கள் வைத்து வருகின்றனர். இரவு நேரங்களில் ஒளிரும் போர்டு தெரியாததால், வாகன ஓட்டிகள் சாலையின் மையத்திலுள்ள தடுப்புகள் மீது மோதி விபத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்க ஒளிரும் போர்டுகள் மீது பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் வலி யுறுத்தியுள்ளனர்.