tamilnadu

img

அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அமராவதி கரையோர மக்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை, ஜூன் 14 – அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகு திகளில் கனமழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. எந்நேரத்திலும் தண்ணீர் திறந்து  விடலாம் என்பதால் அமராவதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் கொள்ள ளவு 90 அடியாகும். இந்நிலையில் அணை யின் நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய பகுதிகளில் கன  மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர் மட்டம் சனியன்று காலை 7  மணியளவில் 85.11 அடியாக உயர்ந்துள் ளது.  அமராவதி அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமராவதி ஆற்றில் எந்த நேரத்திலும் உபரி நீர் திறந்து விடப்படலாம். எனவே அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கை யாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.