tamilnadu

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குடிசை வீட்டில் தீ தருமபுரி,

மார்ச் 11- பாலக்கோடு அருகே குடிசை வீடு எரிந்து அனைத் துப் பொருட்களும் சேதமா னது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மாரியப்ப செட்டி தெருவில் வசித்து வரு பவர் நாகலட்சுமி (40). இவ ரது கணவர் ஹரிகரன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு  இறந்துவிட்டார். இவர்க ளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நாகலட் சுமி தனது மகளை பார்ப்ப தற்காக ஈரோடு சென்றிருந்த நிலையில், திங்களன்று மதி யம் அவரது வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. பூட்டிய வீட்டினுள் இருந்து புகை வந்ததை கண்ட அக்கம் பக் கத்தினர் பாலக்கோடு தீய ணைப்பு துறையினருக்கு தக வல் தெரிவித்தனர். விரைந்து  வந்த தீயணைப்பு துறையி னர் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இருப் பினும் குடிசை வீடு முற்றிலு மாக எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி, துணிமணிகள், பாத்திரங்கள், உணவுப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் தீக்கிரையாகின. இச்சம்ப வம் தொடர்பாக பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த கோரிக்கை

மேட்டுப்பாளையம், மார்ச் 11- கடந்த சில ஆண்டுகளாக நடைபெ றாமல் இருக்கும், கோவில் வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த வேண்டும் என, சிஐடியு மேட் டுப்பாளையம் பொதுத்தொழிலாளர் சங்கத்தின் செயலாளரும், சமூக செயற் பாட்டாளருமான எஸ்.பாஷா தமிழக முதல் வருக்கு கோரிக்கை வைத்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்ப தாவது: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் வளர்க்கப்படும் யானை களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடந்த 9 ஆண்டுகளாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமத்தில் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வந்தது. 48 நாட் கள் நடைபெறும் இந்த முகாமில், யானைகளுக்கு பவானி ஆற்றங்கரை யில் இயற்கையான முறையில் குளி யல், மருத்துவ பரிசோதனைகள், ஊட் டச்சத்து மாவு கலவை, பசுந்தீவனம் உள் ளிட்ட ஊட்டச்சத்து மருந்துகள் மருத்து வர்களின் கண்காணிப்பில் வழங்கப் பட்டு வந்தது. இதனால் தமிழக கோவில் களில் இருந்த யானைகள் மிகவும்  மகிழ்ச்சியாகவும், உடல் ஆரோக்கியத் துடனும் இருந்து வந்தன. கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த புத்துணர்வு முகாம் கடந்த 2021 ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெற வில்லை. இதற்கிடையே 2024 நவம்பர்  மாதம் திருச்செந்தூர் கோயில் யானை  தெய்வானை பாகன் உள்ளிட்ட இரு வரை மிதித்து கொன்றது. இது பக்தர் களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு யானைகளுக்கான சிறப்பு முகாமை தமிழக அரசு நடத்தும் என்று  பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தற் போது வரை அதற்கான அறிவிப்பு வர வில்லை. எனவே, பல்வேறு நலத்திட் டங்களை செயல்படுத்தி வரும் தங்க ளின் ஆட்சியில், கடந்த சில ஆண்டுக ளாக நடைபெற்று வந்த யானைகள் சிறப்பு முகாமை நடத்திட வேண்டும், என அதில் குறிப்பிட்டுள்ளார்.