வணிக வளாகத்தில் தீ விபத்து
கோவை, செப்.28- ஒப்பணக்கார வீதியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. கோவை மாநகரின் முக்கிய மையப்பகுதி டவுன்ஹால். இங்கு ஏராளமான ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளன. நாள் தோறும் கோவை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களும் வந்து வீடுகளுக்கு தேவையான பொருட்கள், ஆடைகள் வாங்கிச் செல்வது வழக்கம். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதாலும், அப்பகுதியில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தற் பொழுது அதிக எண்ணிக்கையில் வர துவங்கியுள்ள னர். மேலும், ஞாயிறன்று விடுமுறை தினம் என்பதால், சற்று கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில், ஒப் பணக்கார வீதியில் உள்ள வணிக வளாகத்தில் சிம்கோ என்ற கடையின் மேல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு இருந்தவர்கள் தீய ணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத் துறை யினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்தான காரணம் தெரியவில்லை. மேலும், தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்து விசா ரணைக்கு பின்னர் தீ விபத்துக்கான காரணம் தெரியவ ரும் என தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறை யினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியானது புகைமண்டலமாக காட்சியளித்த தால் பரபரப்பு ஏற்பட்டது.
