குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ
பொள்ளாச்சி, செப்.24- வடுகபாளையம் அருகே குடியிருப்புகளுக்கு நடுவில் குப்பை கிடங்கில் மள மள வென பற்றி எரிந்த தீயை தீய ணைப்பு துறையினர் அணைத்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வடுக பாளையம் பகுதியில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆலமரத்து அம்மன் கோயில் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள குப்பை கிடங்கில் புதனன்று திடீரென எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்தது. குப்பை கிடங்கில் பண்டல் - பண்டலாக பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காகித பொருட்கள் இருந்த தால், சிறிதளவு பற்றிய தி காற்றின் வேகத்தில் மள மள வென தீ பற்றியது. இதனால் விண்ணை முட்டும் அளவு கரும்புகை வெளியேறியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் திடீரென தீப்பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத் திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.