tamilnadu

தீ விபத்து திருப்பூர், ஏப்.5- பெருமாநல்லூர்

தீ விபத்து திருப்பூர், ஏப்.5- பெருமாநல்லூர் அருகே பனியன் நிறுவனத்தில் ஏற் பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரை அடுத்த பொங்குபாளையத்தில் தனி யாருக்கு சொந்தமான பனி யன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், வெள்ளி யன்று இரவு நிறுவனத்தில் இருந்த தொழிலாளர்கள் பனியன் நிறுவனத்தை பூட்டி  விட்டு சென்றனர்.சனியன்று  அதிகாலை பனியன் நிறுவ னத்தில் இருந்து புகை வரு வதை கண்ட பகுதி பொது மக்கள், தீயணைப்புத் துறை யினருக்கு தகவல் அளித்த னர். அதன்பேரில் சம்பவ  இடத்திற்கு வந்து தீய ணைப்புத் துறையினர் மூன்று தீயணைப்பு வாக னங்கள் உதவியுடன், 2 மணி  நேரத்திற்கு மேலாக போராடி  தீயை அணைத்தனர்.