tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ரசாயனத் தொழிற்சாலையில் தீ விபத்து

மேட்டூர் அருகே செயல்பட்டு வந்த ரசா யனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள  கருமலைக்கூடல் பகுதியில் செம்பன் (75)  என்பவருக்கு சொந்தமான ரசாயனத் தொழிற் சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற் சாலையில் மக்னீசியம் சல்பேட் என்ற ரசா யனம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலை யில், வியாழனன்று இரவு 11 மணியளவில் ரசா யனத் தொட்டியில் திடீரென தீ விபத்து ஏற் பட்டது. இவ்விபத்து குறித்து கருமலைக் கூடல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத் திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட  நேரம் போராடி தீயை அணைத்தனர். இத னால் அருகிலுள்ள மற்ற தொழிற்சாலைக ளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பி னும், தீ விபத்தின்போது பணியிலிருந்த நங்க வள்ளியைச் சேர்ந்த ராஜா கவுண்டர் (56), கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்த முரு கன் (54) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். உயிருக்கு ஆபத் தான நிலையில் இருந்த இருவரையும் தீய ணைப்பு துறையினர் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச் சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்ப வம் தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

இலவச கால்நடை மருத்துவ முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பட்டியலின  விவசாயிகளுக்கான இலவச கால்நடை மருத் துவ முகாம் வெள்ளியன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பில்பருத்தி கிராமத்தில் பட்டியலின விவசாயிகளுக்கான இலவச கால்நடை மருத்துவம் மற்றும் மலடு நீக்க முகாம், பாப் பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலை யம் சார்பில் வெள்ளியன்று நடைபெற்றது. வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரி யர் சிவக்குமார் தலைமை வகித்தார். வேளாண்மை அறிவியல் நிலையங்களில் விஞ்ஞானிகளை தொடர்பு கொண்டு விவசா யிகள் புதிய தொழில்நுட்பங்களைப் பெற  வேண்டும் என முகாமில் தெரிவிக்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர் ரவி, அறிவியல் நிலைய கால்நடை விஞ்ஞானி தங்கதுரை ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு, கோடை காலத்திற்கான கால்நடை பராமரிப்பு மற்றும் மலடு நீக்க முறைகளை பற்றி எடுத் துரைத்தனர். முகாமிற்கு கொண்டு வரப் பட்ட விவசாயிகளின் மாடுகளுக்கு சினை  ஊசி, மலடு நீக்கம், குடற்புழு நீக்கம், தடுப் பூசி, உன்னி நீக்கம் ஆகிய அனைத்திற்கும் தேவையான மருந்துகள் வழங்கப்பட்டன.

ரூ.2 கோடி அபராதம் சேலம்

, மார்ச் 7- சேலம் ரயில்வே கோட் டத்தில் கோட்ட மேலாளரின் உத்தரவின் பேரில், முது நிலை வணிக மேலாளர் பூபதி ராஜா தலைமையிலான வணிகப்பிரிவு அலுவலர்கள் ரயில்களில் சோதனை மேற் கொண்டனர். சேலம் கோட்ட பகுதியில் இயங்கும் ரயில் களில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட சோதனையில் பயணச்சீட்டு பெறாதது, முன் பதிவில்லா பயணச்சீட்டை வைத்துக்கொண்டு முன்ப திவு பெட்டியில் பயணித்தது, அதிக பாரம் கொண்டு சென் றது என 29,710 பயணிகளிடம் ரூ.2,04,46,434 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மில்லில் விபத்து

பொள்ளாச்சி, மார்ச் 7– கோவை மாவட்டம், பொள் ளாச்சி அருகே பொன்னே கவுண்டனூர் பகுதியில் பாபு என்பவருக்குச் சொந்தமான மட்டை மில்லில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விஸ் வநாத் என்பவர் குடும்பத்து டன் தங்கி வேலை செய்து வருகிறார். அவரது மகள்  ஹெரினா (17) மில்லில் வேலை செய்து கொண்டி ருந்தபோது எதிர்பாராதவித மாக இயந்திரத்தில் இடது கை சிக்கியது. இதில் அவ ரது கை மணிக்கட்டுடன் துண் டானது. உடனடியாக அரு கில் இருந்த கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத் துக்கு ஹெரினா கொண்டு  செல்லப்பட்டார். பின்னர்,  பொள்ளாச்சி அரசு மருத்து வமனை மற்றும் கோவை யில் உள்ள தனியார் மருத்து வமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்தும், குழந்தை தொழி லாளியை பணியில் அமர்த் தியது குறித்தும், கோமங்க லம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

ஆடுகளை வேட்டையாட மீண்டும் வந்த சிறுத்தை

கோவை, ஓணாப்பாளையம் பகுதியில் ஆடுகளை வேட்டையாட மீண்டும் சிறுத்தை உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலையில் அமைந்துள்ள ஓணப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா (54) என்பவர் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் தனது தோட்டத்தில் ஆடு களையும் மேய்த்து வருகிறார். கடந்த மார்ச் 1ஆம் தேதி இவரது தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று அங்கு கட்டி வைத்திருந்த 4  ஆடுகளை கடித்துக் கொன்றது. இது குறித்து கோவை சரக வனத்துறையினருக்கு தகவல்  அளிக்கப்பட்ட நிலையில், வனத்துறையினர்  அங்கு கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க கண்காணித்து வந்தனர். மேலும் கண்கா ணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டது. வெண் ணிலா தனது ஆடுகளை அங்கிருந்த வீட்டு அறைக்குள் அடைத்து வைத்திருந்தார். இந்நிலையில், வியாழனன்று நள்ளிரவு மீண்டும் வெண்ணிலாவின் விவசாய தோட் டத்திற்கு வந்த சிறுத்தை ஆடுகளைத் தேடி  அலைந்தது. இந்தக் காட்சிகள் அங்கு  பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா வில் பதிவாகியுள்ளது.

இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  வீட்டின் வாசல் மற்றும் வனப்பகுதியிலிருந்து  வெளியேறும் எல்லை என இரண்டு இடங்க ளில் வனத்துறையினர் கூண்டு வைத்துள்ள னர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்கா ணித்து படம் பிடிக்க கேமராக்களும் பொருத் தப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 ஆடுகளை வேட் டையாடிச் சென்ற சிறுத்தை மீண்டும் அதே தோட்டத்தில் உலா வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகை யில், சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், விரைவில் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக் கப்படும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக் கவும், வீடுகளை விட்டு வெளியே வரவேண் டாம் என எச்சரித்தனர்.

குறைபாடான மின்சார வாகனம்: இழப்பீடு வழங்க உத்தரவு

கருமத்தம்பட்டியிலுள்ள ஓஜோ  டெக் ஆட்டோ மொபைல்ஸ் என்ற நிறு வனத்தில் இருந்து வாங்கிய மின்சார இருசக்கர வாகனத்திற்கு, அந்நிறுவ னம் ரூ. 1.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள் ளது. கோவை, பீளமேடு, விளாங் குறிச்சி சாலையை சேர்ந்தவர் விஜ யன். இவர் கருமத்தம்பட்டியிலுள்ள ஓஜோ டெக் ஆட்டோ மொபைல்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்து, ரூ.1.25 லட்சம் செலுத்தி மின்சார இரு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். இதற் காக அவர் வங்கிக் கடனையும் பெற் றுள்ளார். ஆனால் வாகனத்தை வாங் கியது முதலே வாகனத்தில் உள்ள வேகத்தை காட்டும் திரை சரியாக வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதையடுத்து அவர் அந்நிறுவனத் தின் பழுது பார்க்கும் மையத்தில் கொடுத்துள்ளார். பழுது நீக்கியும் மின்சார இரு சக்கர வாகனத்தில் அந் நிறுவனத்தினர் கூறிய மைலேஜ்  கிடைக்காமல் இருந்துள்ளது. மேலும் எவ்வளவு கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கும் என நிறுவனத்திடம் கேட்டபோது அதற்கான உத்தரவா தத்தையும் தர மறுத்துள்ளனர். அதிக  பணம் கொடுத்து மின்சார இரு சக்கர வாகனம் வாங்கியும், மிக குறைவான கிலோமீட்டர் மைலேஜ் கிடைத்த தால் மன உளைச்சலில் விஜயன் இருந்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட விஜயன் இரு சக்கர வாகனம் வாங்கியதற் கான தொகை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நிறுவனத் தின் மீது கோவை நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நுகர் வோர் ஆணைய தலைவர் சக்திவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர், மின்சார இரு சக்கர வாகனம் உற்பத்தி நிறுவனம் மனுதாரரான விஜயனுக்கு ரூ.1.25 லட்சத்தை திருப்பி கொடுக்க வேண் டும். மன உளைச்சலை ஏற்படுத்திய தற்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அதேபோல் வழக்கு செல வான ரூபாய் ரூ.5 ஆயிரத்தையும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.