விபத்தில் தந்தை, மகள் உயிரிழப்பு
நாமக்கல், ஜூன் 24- நாமக்கல்லில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், தந்தை, மகள் உயிரி ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாநகராட்சி, கொசவம்பட்டி, அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி (62). இவரது மகள் பானுமதி (28), நாமக்கல் உழவர் சந்தை எதிரி லுள்ள மாநகராட்சிப் பூங்காவில் நுழைவுச்சீட்டு வழங் கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், பணிக்குச் சென்ற பானுமதியை, அவரது தந்தை பெரியசாமி திங்களன்று இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, நாமக்கல் - துறையூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். நாமக்கல் காவல் நிலையம் எதிரில், மூன்று சாலை சந்திப்பில் திரும்பியபோது, திருச்சி யிலிருந்து நாமக்கல் நோக்கி வந்த அரசுப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தோர் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், பானுமதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தீவிரச் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெரியசாமியும் உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து நாமக்கல் நகர காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து, திருச்சி மாவட்டம், தொட்டி யம், அரசலூர் பகுதியைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் செந்திலை (41) கைது செய்தனர்.
மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு
உதகை, ஜூன் 24- உதகையை அடுத்த, புதுமந்து பகுதியில் வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை அடுத்த புதுமந்து ஓடைக் காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (41). இவர் அந்த பகுதியில் கால்நடைகள் வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 மகன் கள் உள்ளனர். இவருடைய மூத்த மகன் சுனித் (10) கக்குச்சியில் உள்ள மகாத்மா காந்தி பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், திங்களன்று சுனித்தின் தாயார் வீட்டில் சுடு தண்ணீர் வைப்பதற் காக வாளியில் தண்ணீர் வைத்து வாட்டர் ஹீட்டரை போட்டுள்ளார். இதன் பிறகு தண்ணீர் சூடாகும் வரை வேறு வேலைகளை பார்த்துவிட்டு முடிவில், சுனித்தின் தாயார் கால்நடைகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்று விட்டார். அப்போது அங்கு வந்த சுனித் எதிர்பாராதவிதமாக வாலியில் கைவைத்துள்ளார். அப்போது வாளி தண் ணீரில் இருந்த வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்து சுனித் தூக்கி வீசப்பட்டார். அப்போது சுனித் தின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தனர். இதுகுறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபானக்கடையை அகற்றக்கோரி போராட்டம்
தருமபுரி, ஜூன் 24- பொம்மிடியில் உள்ள மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், பொம்மிடி ஊராட்சி யில் வடசந்தையூர், சாலவலசு, கொட்டாவூர், குப்பனூர், பொம்மிடி, நடூர் உள்ளிட்ட 18 கிரா மங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 15 ஆயி ரம் மக்கள் வசித்து வருகின்றனர். வடசந்தை யூர் நான்கு சாலைப் பகுதியில் அரசு மது பானக்கடை (டாஸ்மாக்) கடந்த 10 ஆண்டுக ளுக்கு மேல் இயங்கி வருகிறது. இக்கடைக்கு வருவோர், தினசரி தகராறில் ஈடுபடுவது, சாலையில் பாட்டில்களை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்ற னர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு மட்டுமின்றி, பெண்கள் மற் றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. இக்கடையை அகற்ற வேண் டும் அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்ப குதி பொதுமக்கள் திங்களன்று, மதுக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த அரூர் துணை காவல் கண்காணிப் பாளர் பாரி சங்கர், தருமபுரி மாவட்ட டாஸ் மாக் மேலாளர் கேசவன், உதவி ஆணையர் நர்மதா, கோட்ட ஆய அலுவலர் செல்வ குமார் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத் தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில், இன்னும் 10 நாள்களில் மதுக்கடை இடமாற்றம் செய் யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையேற்று பொதுமக்கள் போராட்டத் தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
பறிமுதல் செய்த செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
உதகை, ஜூன் 24- செல்போன் திருடிய நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 128 செல்போன்களை உரிய நபர்களிடம் போலீசார் ஒப்ப டைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் மீட்கப்பட்ட செல்போன் உரியவரி டம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி உதகை சிறுவர் மன்றத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் நிஷர தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி கண்டன் முன்னிலையில் மீட்கப்பட்ட, 128 செல்போன் உரிய வரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியா ளர்களிடம் பேசிய நிஷா, நீலகிரியில் அடையாளம் தெரியாத நபர்களால் வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் தொலைந்து போன செல்போன்கள் குறித்து காவல் நிலை யத்தில் புகார் செய்தவுடன் அந்த புகார் பதிவு செய்யப்பட்டு சைபர் கிரைம் பிரிவு போலீசார் செல்போன்களை கண்டுபிடிக் கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தொலைந்துபோன அல்லது பறித்துச் சென்ற செல்போனை மற்றொருவர் பயன்ப டுத்தும்போது அதில் உள்ள ஐ.எம்.இ.ஐ. எண் மூலம் தகவல் சைபர் கிரைம் பிரிவு போலீசாருக்கு கிடைக்கும். இதன் அடிப் படையில் உதகையில், 128 செல்போன்களும் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது, என்றார்.