ஆட்சியர் அலுவலகத்தில் மின் தூக்கிகள் பழுது
திருப்பூர், ஜூன் 11- திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் புத னன்று 2 மின் தூக்கிகள் பழு தடைந்ததால், அரசு அலுவ லர்கள் மற்றும் பொதுமக் கள் கடும் சிரமத்திற்குள் ளாகினர். திருப்பூர் - பல்லடம் சாலையில் ஆட்சியர் அலுவ லக பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ளது. தரைத்த ளம் உள்ளிட்ட 7 தளங்களு டன் அமைக்கப்பட்டுள்ள இக் கட்டடத்தில் கருவூலம், கனி மவளத் துறை, ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வரு வாய் அலுவலர் அலுவல கம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம், பள்ளிக்கல்வித் துறை, அரசு தேர்வுகள் அலுவலகம், மாற்றுத்திற னாளிகள் அலுவலகம், சமூக நலத்துறை உள்ளிட்ட ஏராள மான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் நூற்றுக் கணக்கான அலுவலர்கள் மட்டுமல்லாது, இந்த அலுவ லகங்களில் சேவைகளை பெற தினந்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். தரைத்த ளம் இல்லாமல் 6 தளங்க ளில் அலுவலகங்கள் செயல் பட்டு வருவதால் அவற்றுக்கு எளிதாக செல்லும் வகையில் 4 மின் தூக்கிகள் பயன் பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் புதனன்று 2 மின்தூக்கிகள் பழுதாகிவிட் டது. மீதமுள்ள இரண்டு மின் தூக்கிகளை மட்டுமே அலு வலர்கள், பொதுமக்கள் பயன்படுத்தினர். இதனால் அலுவலர்களும், பொது மக்களும் பெரும் சிரமத் திற்குள்ளாகினர். மேலும், சுய உதவிக் குழு தின விழா 2 மற்றும் 5 ஆவது தளங் கத்திலுள்ள கூட்டரங்குக ளில் நடைபெற்றது. இவைக ளில் கலந்து கொள்ள வந்த சுய உதவிக்குழு பெண் களும் 4 மாடிகள் வரை நடந்த சென்று சோர்வடைந் தனர். எனவே மின் தூக்கிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என அரசு அலு வலர்கள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தினர்.