tamilnadu

img

யானை கூட்டம் மோதி டிராஸ்பார்பர் வெடிப்பு

கோவையில் யானைக்கூட்டம் மோதியதில் டிராஸ்பார்மர் வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கோவைமாவட்டம் துடியலூர் அருகே நாயக்கன்பாளையம் பகுதியில் கூட்டமாக வந்த யானைகள் டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இதில் டிராஸ்பார்மர் வெடித்து சிதறியது. எனினும் நல்வாய்பாக யானைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து யானைகள் ஊருக்குள் வந்துள்ளன என்பதை கவனித்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் வெடிவெடித்து யானைகளை வனத்துக்குள் விரட்டினர்.