tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

தலைக்கவசம் இன்றி வரக்கூடாது நாமக்கல் ஆட்சியர் அதிரடி

தலைக்கவசம் இன்றி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அரசு அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமாவின் உத்தர வின்பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார், மாவட்டம் முழுவ தும் அடிக்கடி வாகன தணிக்கை செய்து, சாலை விதி களை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்து வருகின்றனர். குறிப்பாக, இரண்டு சக்கர வாக னங்களில் செல்பவர்கள் விபத்துகளில் சிக்கி உயிரி ழப்பதை தடுக்கும் வகையில், தலைக்கவசம் அணியா மல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு அபரா தம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட  ஆட்சியரின் அதிரடி உத்தரவின்படி, ஆட்சியர் அலுவ லகத்திற்கு இரண்டு சக்கர வாகனங்களில் வருபவர்க ளின் வாகனங்கள், ஆர்டிஓ அலுவலர்கள் மற்றும் போலீ சார் மூலம் சோதனை செய்யப்பட்டன. அப்போது, தலைக்கவசம் அணியாமல் வந்த அரசுத்துறை அதிகாரி கள், அலுவலர்கள், பொதுமக்கன் என மொத்தம் 51  பேரின் வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப் பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற தணிக்கை கள் தொடர்ந்து நடைபெறும் என வட்டார போக்கு வரத்து துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஒரு டன் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

தருமபுரி, ஏப்.16- பாலக்கோடு அருகே மினி சரக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ஒரு டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு புதிய தேசிய  நெடுஞ்சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப் பட்ட குட்கா பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் மனோ கரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் புதனன்று பாலக்கோடு புதிய தேசிய  நெடுஞ்சாலையில், காவல் ஆய்வாளர் பாலசுந்தரம், உதவி ஆய்வாளர்கள் கோகுல், சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடகா மாநி லம், பெங்களூருவிலிருந்து தருமபுரி நோக்கி வேகமாக வந்த மினி சரக்கு லாரியை போலீசார் நிறுத்த முயன்ற னர். ஆனால், நிற்காமல் சென்ற வாகனத்தை, போலீசார் விரட்டி  பிடித்து சோதனை செய்தனர். அதில் ரூ.3 லட்சம்  மதிப்பிலான ஒரு டன் குட்கா பொருட்கள் கடத்தி வந் தது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு லாரியை ஓட்டி வந்த ஓட்டுநரான சேலம் மாவட்டம், காட்டுவளைவு பகு தியைச் சேர்ந்த பாபர் (38) என்பவரை கைது செய்து,  நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

கபடி விளையாட்டிற்கு பயிற்சி மையம்

ஈரோடு, ஏப்.16– ஈரோடு மாவட்ட விளையாட்டுத் துறையின் புதிய முயற்சியாக, “ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம்” விரைவில் உதயமாகவுள்ளது. இதன் மூலம், ஈரோட்டின் கபடி விளையாட்டு வீரர்களின் கனவு கள் மேலும் மெருகேற வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன் கரா வெளியிட்ட அறிக்கையில், ஈரோட்டில், கபடிக்காக துவங்க உள்ள இந்த பயிற்சி மையத்தில் 12 முதல் 21  வயது வரை உள்ள திறமையான 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகள் என மொத்தம் 40 பேர் தேர்ந்தெடுக்கப் படவுள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்தில் 25 நாட்கள் தீவிர பயிற்சி அளிக்கப்படும். ஆர்வமுள்ள வீரர்களுக்கு  தரமான பயிற்சி உபகரணங்கள், விளையாட்டு சீருடை கள் மற்றும் சத்தான சிற்றுண்டியும் வழங்கப்படும். தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.  பயிற்சியாளர்கள், இந்திய விளையாட்டு ஆணை யத்தின் தேசிய விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்றி ருக்க வேண்டும் அல்லது தேசிய விளையாட்டு நிறுவ னத்தின் இந்திய விளையாட்டு ஆணையத்தால் வழங் கப்படும் ஓராண்டு டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும்  விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுப் பயிற்சியில் முதுநிலைப் பட்டயம் அல்லது குவாலியரில் உள்ள லஷ்மி பாய் தேசிய உடற்கல்வி நிறுவனத்தில் விளையாட்டுப் பயிற்சியில் முதுநிலைப் பட்டயமும் பெற்றிருக்க வேண்டியது அவசியம். 50 வயதிற்குட் பட்ட, அனுபவம் மிக்க பயிற்சியாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்க ளுக்கு 11 மாதங்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும், மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 20.04.2025. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 24 மற்றும் 25.04.2025 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703490 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூங்காவில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தித்தர கோரிக்கை

நாமக்கல், ஏப்.16- குமாரபாளையம் அம்மா பூங்காவில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும், என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், கத்தேரி பிரி வில் அம்மா பூங்கா உள்ளது. குளத்துக்காடு, தட்டான் குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகர், சத்யா நகர், கதி ரவன் நகர், வட்டமலை, வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், இப்பூங்காவிற்கு நடைபயிற்சிக்கு வருகின்றனர். பெரியவர்கள் தங்கள்  குழந்தைகளுடன் மாலை நேரங்களில் வந்து ஊஞ்சல் ஆடி, பொழுதை கழித்து வருகின்றனர். பள்ளி விடு முறை என்பதால், இன்னும் இரண்டு மாதங்கள் கூட்டம் அதிகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இங்கு போதுமான மின்விளக்குகள் இல்லாததால், பாம்பு, தேள் போன்றவைகள் வர வாய்ப்பாக உள்ளது. எனவே, பூங்காவில் போதுமான மின்விளக்குகள் அமைத் துத்தர வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.